Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கோழிக்கோடு விமான நிலையத்தில் இரு தரப்பினருக்கிடையில் பயங்கர மோதல்

Go down

கோழிக்கோடு விமான நிலையத்தில் இரு தரப்பினருக்கிடையில் பயங்கர மோதல் Empty கோழிக்கோடு விமான நிலையத்தில் இரு தரப்பினருக்கிடையில் பயங்கர மோதல்

Post by oviya Fri Jun 12, 2015 3:26 pm

கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்தில் நடந்த மோதல் சம்பவத்தில் சிஐஎஸ்எப் வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு சிஐஎஸ்எப் வீரர் மற்றும் 2 வீரர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோழிக்கோடு கரிப்பூரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் விமான நிலையத்தின் அதிபாதுகாப்பு நுழைவு வாயில் வழியாக, தீயணைப்பு வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரர்கள், தீயணைப்பு படை வீரர்களை தடுத்து நிறுத்தினர். பரிசோதனைக்கு பிறகே உள்ளே செல்ல முடியும் என்று சிஐஎஸ்எப் வீரர்கள் கூறினர்.

இதற்கு தீயணைப்பு வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு விமான நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொடர்ந்து சிஐஎஸ்எப் வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா சிஐஎஸ்எப் வீரர் சுரேஷ் சிங் யாதவ் உடலில் பாய்ந்தது. அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் மீண்டும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இந்த மோதலில் சிஐஎஸ்எப் வீரர் சீதாராம் சவுத்ரி படுகாயம் அடைந்தார்.

இவர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதே போல் தீயணைப்பு வீரர்கள் சன்னி தாமஸ், அஜிகுமார் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். ஆத்திரம் அடைந்த சிஐஎஸ்எப் வீரர்கள் விமான நிலையத்தின் சிக்னல் அறை, தீயணைப்பு அலுவலகத்தை சூறையாடினர். தீயணைப்பு வீரர்கள் தங்களது வாகனங்களை விமானங்கள் இறங்க முடியாத வகையில் ரன்வேயில் வரிசையாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த 2 விமானங்கள் தரையிறங்க முடியவில்லை. தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் அந்த 2 விமானங்களையும் கொச்சிக்கு திருப்பிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை செயலாளர் கோயலுக்கு அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டார். உள்துறை செயலாளர் இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க கேரள டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

இந்த மோதல் சம்பவம் காரணமாக நேற்று முன்தினம் இரவு கரிப்பூர் விமான நிலையம் அதிரடியாக மூடப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.

கத்தாரில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் காலை 7.15 மணிக்கு தரையிறங்கியது. இதனால் அங்கு சகஜ நிலை திரும்பியது.

கோழிக்கோடு விமான நிலைய துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிஐஎஸ்எப் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் 15 பேரிடம் பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum