Top posting users this month
No user |
சகோதரியின் எலும்புக்கூடுடன் வாழ்ந்து வந்த நபர்: வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்
Page 1 of 1
சகோதரியின் எலும்புக்கூடுடன் வாழ்ந்து வந்த நபர்: வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்
கொல்கத்தாவில் கடந்த 6 மாதங்களாக தனது சகோதரியின் எலும்புக்கூடுடன் ஒருவர் வாழ்ந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்த்தா டே என்பவர் தெற்கு கொல்கத்தாவின் ராபின்சன் லேக் பகுதியில் வசித்து வந்தார்.
கடந்த புதன் கிழமை அவரது வீட்டிலிருந்து நெருப்பும், புகையுமாய் கிளம்பியது. இதனால் அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த வீட்டில் பொலிசார் சோதனை நடத்திய போது குளியலறையில் எரிந்த நிலையில் இருந்த 70 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடைத்தது.
மேலும், ஒரு அறையில், ஒரு பெண்ணின் எலும்புக்கூடும், இரண்டு நாய்களில் எலும்புக்கூடும் இருந்தன.
அந்த பெண் கடந்த டிசம்பர் மாதமும், இரண்டு நாய்களும் கடந்த ஆகஸ்ட் மாதமும் இறந்திருக்க வேண்டும் எனத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பார்த்தா டேவிடம் பொலிசார் விசாரித்ததில், எங்கள் வீட்டின் நாய்கள் இறந்துவிட்டதால் அந்த சோகத்தில் எனது சகோதரி தேப்ஜானி டே பட்டினி இருந்து இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
நாய்கள் மற்றும் சகோதரி உடலை ஒரு அறையில் பதுக்கி வைத்த பார்த்தா, துர்நாற்றம் ஏதும் வராமல் அந்த அறை முழுவதையும் சீல் செய்துள்ளார்.
அவ்வப்போது அந்த எலும்பு கூடுகளுக்கு உணவும் வழங்கி கடந்த 6 மாதமாக அதனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
பார்த்தா மீது யாரும் புகார் தெரிவிக்காத நிலையில், அவரை மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பார்த்தா, கடந்த 2007ம் ஆண்டு அந்த வேலையை கைவிட்டுள்ளார்.
பார்த்தா டே என்பவர் தெற்கு கொல்கத்தாவின் ராபின்சன் லேக் பகுதியில் வசித்து வந்தார்.
கடந்த புதன் கிழமை அவரது வீட்டிலிருந்து நெருப்பும், புகையுமாய் கிளம்பியது. இதனால் அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த வீட்டில் பொலிசார் சோதனை நடத்திய போது குளியலறையில் எரிந்த நிலையில் இருந்த 70 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடைத்தது.
மேலும், ஒரு அறையில், ஒரு பெண்ணின் எலும்புக்கூடும், இரண்டு நாய்களில் எலும்புக்கூடும் இருந்தன.
அந்த பெண் கடந்த டிசம்பர் மாதமும், இரண்டு நாய்களும் கடந்த ஆகஸ்ட் மாதமும் இறந்திருக்க வேண்டும் எனத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பார்த்தா டேவிடம் பொலிசார் விசாரித்ததில், எங்கள் வீட்டின் நாய்கள் இறந்துவிட்டதால் அந்த சோகத்தில் எனது சகோதரி தேப்ஜானி டே பட்டினி இருந்து இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
நாய்கள் மற்றும் சகோதரி உடலை ஒரு அறையில் பதுக்கி வைத்த பார்த்தா, துர்நாற்றம் ஏதும் வராமல் அந்த அறை முழுவதையும் சீல் செய்துள்ளார்.
அவ்வப்போது அந்த எலும்பு கூடுகளுக்கு உணவும் வழங்கி கடந்த 6 மாதமாக அதனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
பார்த்தா மீது யாரும் புகார் தெரிவிக்காத நிலையில், அவரை மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பார்த்தா, கடந்த 2007ம் ஆண்டு அந்த வேலையை கைவிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum