Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தென் மாகாண அமைச்சர் டீ.வீ. உபுலின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Go down

தென் மாகாண அமைச்சர் டீ.வீ. உபுலின் விளக்கமறியல் காலம் நீடிப்பு Empty தென் மாகாண அமைச்சர் டீ.வீ. உபுலின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Post by oviya Wed Jun 10, 2015 2:34 pm

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் தென் மாகாண சபை அமைச்சர் டீ. வீ. உபுல் தற்போது கொழும்பு, கோட்டை நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதாகவும், நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகளைக் கல்லெறிந்து கொல்வதற்கு பார்த்துக்கொண்டிருப்பாதாக அவர் கருத்து வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியிருந்தார்.

இதேவேளை அவர் வெளியிடட அந்த சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு, இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் அவருக்கான விளக்கமறியல் மேலும் நீடிக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மாகாண அமைச்சரின் விளக்க மறியல் காலம் நீடிப்பு!

தென் மாகாண அமைச்சர் டி.வீ. உபுலின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் 15ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், நிதிக் குற்றவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களை மக்களைக் கொண்டு கல்லால் தாக்கி கொலை செய்வதாக உபுல் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த சம்பவம் பொலிஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

உபுல் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போலி கடவு சீட்டை பயன்படுத்திய உபுல்

நிதிமோசடி விசாரணைப் பிரிவு காவல் துறையினரை கல்லெறிந்து கொலை செய்யப்போவதாக கூறியது தொடர்பில் தென் மாகாண அமைச்சர் டி.வி. உபுல் கைது செய்யப்பட்டிருந்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு போலியான தகவல்களை வழங்கி முறைசாரா வெளிநாட்டு கடவுசீட்டுகளை பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் இதனை அறிவித்த பின்னர் சந்தேக நபரின் வெளிநாட்டு கடவுசீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

அவர் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்காமல் பிறந்த தினத்தை தவறுதலாக பதிவு செய்து இவ் போலி வெளிநாட்டு கடவு சீட்டுகளை பெற்றுக்கொண்டுள்ளதாக குற்ற புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை சந்தே நபரான தென் மாகாண சபை அமைச்சர் டீ. வீ. உபுல் தற்போது கொழும்பு, கோட்டை நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum