Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மட்டக்களப்பில் அரச உத்தியோகஸ்த்தர் படுகொலை: எச்சரித்தது போன்று கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.

Go down

மட்டக்களப்பில் அரச உத்தியோகஸ்த்தர் படுகொலை: எச்சரித்தது போன்று கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம். Empty மட்டக்களப்பில் அரச உத்தியோகஸ்த்தர் படுகொலை: எச்சரித்தது போன்று கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.

Post by oviya Mon Jun 08, 2015 2:22 pm

கடந்த 26ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட சமூக சேவைகள் உத்தியோஸ்த்தரின் படுகொலையை கண்டித்தும்,கொலையாளியை விரைவாக கைது செய்யக்கோரியும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மண்டூர் பகுதியில் கடந்த 26ஆம் திகதி சமூக சேவைகள் உத்தியோகத்தர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும், இதுவரையில் கொலையாளிகள் கைதுசெய்யப்படாததை கண்டித்தும் விரைவாக கொலையாளிகளை கைதுசெய்யக்கோரியும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் இந்த கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடாத்தப்பட்டுள்ளது.



இன்று காலை மட்டக்களப்பு,காந்தி பூங்காவுக்கு முன்பாக இந்த கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடாத்தப்பட்டது.

முன்பாக காந்திப்பூங்காவில் இக்கொலையினைக் கண்டித்தும் கொலையாளிகளை கைதுசெய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,மாகாணசபை பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்னம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து காந்தி சதுக்கத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் ஊர்வலமாக சென்று அங்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

கடந்தவாரம் சமூகசேவைகள் உத்தியோகத்தரின் படுகொலை சூத்திரதாரிகள் ஒரு வாரத்திற்குள் கைதுசெய்யப்படாவிட்டால் போராட்டம் நடாத்தப்போவதாக கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum