Top posting users this month
No user |
தினேஷ் குணவர்தனவை பிரதமராக்க முயற்சிக்கும் மகிந்த கோஷ்டி
Page 1 of 1
தினேஷ் குணவர்தனவை பிரதமராக்க முயற்சிக்கும் மகிந்த கோஷ்டி
பிரதமர் பதவியை மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தனவுக்கு பெற்றுக்கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமான அணி சூழ்ச்சியான திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றிபெற்ற பின்னர் ஏற்படுத்தப்படும் புதிய அரசாங்கத்தின் பிரதமர் பதவியை தினேஷ் குணவர்தனவுக்கு பெற்றுக்கொடுக்கவே இந்த சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில உள்ளிட்டோர் இந்த சூழ்ச்சியில் பங்கெடுத்துள்ளதுடன் முற்றிலும் மகிந்த ராஜபக்சவின் தேவைக்கு அமைய இது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவின் விருப்பத்திற்கு அமைய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல அவருக்கு நம்பிக்கையான ஒருவர் பிரதமராக வேண்டும் என்பது இவர்களின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
இதனிடையெ எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா பிரதமர் பதவியை எதிர்ப்பார்த்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நட்புறவை கட்டியெழுப்பி வருவதாக தெரியவருகிறது.
இந்த நிலையில், சுசில் பிரேமஜயந்தவை பிரதமர் பதவிக்கு நியமிப்பது மிகவும் சிறந்தது என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர்.
தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர் அல்ல என்பதால், அவரை ஆதரிப்பதும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதற்கும் இடையில் வித்தியாசங்கள் இல்லை என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரின் நிலைப்பாடாக உள்ளது.
இந்த நிலைமையில், நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால், அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதில் நெருக்கடியான நிலைமை உருவாகும் என கூறப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றிபெற்ற பின்னர் ஏற்படுத்தப்படும் புதிய அரசாங்கத்தின் பிரதமர் பதவியை தினேஷ் குணவர்தனவுக்கு பெற்றுக்கொடுக்கவே இந்த சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில உள்ளிட்டோர் இந்த சூழ்ச்சியில் பங்கெடுத்துள்ளதுடன் முற்றிலும் மகிந்த ராஜபக்சவின் தேவைக்கு அமைய இது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவின் விருப்பத்திற்கு அமைய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல அவருக்கு நம்பிக்கையான ஒருவர் பிரதமராக வேண்டும் என்பது இவர்களின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
இதனிடையெ எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா பிரதமர் பதவியை எதிர்ப்பார்த்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நட்புறவை கட்டியெழுப்பி வருவதாக தெரியவருகிறது.
இந்த நிலையில், சுசில் பிரேமஜயந்தவை பிரதமர் பதவிக்கு நியமிப்பது மிகவும் சிறந்தது என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர்.
தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர் அல்ல என்பதால், அவரை ஆதரிப்பதும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதற்கும் இடையில் வித்தியாசங்கள் இல்லை என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரின் நிலைப்பாடாக உள்ளது.
இந்த நிலைமையில், நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால், அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதில் நெருக்கடியான நிலைமை உருவாகும் என கூறப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum