Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தவளைகளாக மாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்: மாதுலுவாவே சோபித்த தேரர்

Go down

தவளைகளாக மாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்: மாதுலுவாவே சோபித்த தேரர் Empty தவளைகளாக மாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்: மாதுலுவாவே சோபித்த தேரர்

Post by oviya Mon Jun 08, 2015 2:17 pm

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவளைகள் போல் செயற்படுகின்றார்கள் என சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒரு உற்பத்தி பொருளாக மாறியுள்ளதுடன், இதனை எந்நேரத்திலும் விற்பனை செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவளைகள் ஓரிடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்கு தாவுவது போல தாவி வருகின்றனர்.

வேண்டுமாயின் தேடிப்பாருங்கள் இன்று காலை கூட அவர்கள் வேறொரு இடத்திற்கு தாவியிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என முன்மொழியப்பட்டது போன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது விருப்பத்திற்கேற்ப கட்சி மாறுதலை இல்லாதொழிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமெனில் அவர்களுக்கென தகுதிகள் காணப்பட வேண்டும்.

அதாவது வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுக்கு விலங்குகளுடன் பணியாற்றுவதற்கான தகுதி காணப்பட வேண்டும் என்பது போல், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சில தகுதிகள் வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றத்தின் முழு ஆதரவுடன் 20வது திருத்த சட்டம் நிறைவேற்றப்படும் என தான் நம்புவதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

அத்துடன் இவ்வாரத்தில் 20ம் திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும், விரைவில் பொது தேர்தலுக்கு செல்ல முடியும் எனவும் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum