Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மைத்திரியின் ஆதரவு ரணிலுக்கே: ஜோன் அமரதுங்க

Go down

மைத்திரியின் ஆதரவு ரணிலுக்கே: ஜோன் அமரதுங்க Empty மைத்திரியின் ஆதரவு ரணிலுக்கே: ஜோன் அமரதுங்க

Post by oviya Sat Jun 06, 2015 1:06 pm

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம் கொடுப்பதற்கு தயார் நிலையிலுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
செய்வதற்கு வேறு எவ்வித வேலையும் இல்லாமையினாலேயே எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையை பிடித்துக்கொண்டு கூச்சலிடுவதாக அவரை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சிக்கு நம்பிக்கையில்லா விட்டாலும் அரசாங்கம் மிகவும் நம்பிக்கையுடனே செயற்படுகின்றது.

எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தற்போதே தோல்வியடைந்துள்ளது.

நாடாளுமன்றில் உள்ள 225உறுப்பினர்களில் 112 பேர் மாத்திரமே கையொப்பமிட்டுள்ளனர்.

அதற்கமைய பெரும்பான்மை இன்னமும் அரசாங்கத்திடமே உள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் ஆதரவும் பிரதமருக்கு கிடைப்பதனால் எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணை பயனற்றதென அமைச்சர் ஜோன் அமரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் 5 நாட்களில் வரவுள்ள பிரேரணை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, எதிர்வரும் 5 நாட்களுக்குள் நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் உள்ளடக்கப்படும் என்று பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்கவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே பிரதி சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் சுமார் 112 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum