Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மரண தண்டனைத் தீர்ப்பு! தூக்கிலிடுவது சரியா?

Go down

மரண தண்டனைத் தீர்ப்பு! தூக்கிலிடுவது சரியா? Empty மரண தண்டனைத் தீர்ப்பு! தூக்கிலிடுவது சரியா?

Post by oviya Wed Jun 03, 2015 3:24 pm

மரண பயம் உலகில் வாழும் அத்தனை ஜீவராசிகளுக்கும் உரியது. ஆறறிவு படைத்த மனிதனுக்கும் ஐந்தறிவு படைத்த விலங்குகளுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டாயினும் மரண பயம் என்ற விடயத்தில் மட்டும் அனைத்து ஜீவராசிகளும் பொதுமைப்பட்டுக் கொள்கின்றன.
அதாவது எல்லா உயிரினங்களும் மரண பயத்தை உணர்ந்து கொள்கின்றன. இந்த மரணம் இயற்கையாக இடம்பெறும் போது கூட, பயம் ஆட்கொள்கிறது. நிலைமை இதுவாயின் அகால மரணம் என்பது மிகப்பெரும் பயத்தைக் கொடுக்கக் கூடியது.

அதிலும் குறிப்பாக கொல்லப் போகிறார்கள் என்ற உண்மை தெரிகின்ற போது, அந்தப் பயத்தை சாதாரண மொழி நடைக்குள் அடக்கிவிட முடியாது என்பதால், பயத்தின் உச்சத்தை வெளிப்படுத்துவதற்கும் மரண பயம் என்ற சொற்பதம் பிரயோகிக்கப்படுகிறது.

இத்தகையதொரு நிலைமையிலேயே மரண தண்டனை என்பது எழுகை பெறுகிறது. அதாவது மிக மோசமான குற்றம் இழைத்தவருக்கு ஆகக் கூடுதலான தண்டனையாக மரணத்தை வழங்க வேண்டும் என்பதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

மரணத்தை வழங்குவதன் மூலம் குற்றவாளிக்குத் தண்டனை கொடுப்பது, இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்துவது என்பதற்கு அப்பால், இதுபோன்ற குற்றங்களை எவரும் இழைக்காதவாறு தடுப்பது என்ற அடிப்படையில், மரண தண்டனை வழங்கப்படுகிறது.

இங்கு மரண தண்டனை என்பது குற்றவாளியைத் திருத்துவதில்லையாயினும் இது போன்ற குற்றங்களை எவரும் நினைத்துப் பார்க்கக் கூடாது என்பதை முதன்மைப்படுத்தியே மரண தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.

மரண தண்டனை என்பது நாட்டுக்கு நாடு வெவ்வேறுபட்ட முறைகளில் நிறைவேற்றப்படுகிறது.

அந்த வகையில் இலங்கையில் மரண தண்டனை தூக்கில் இடுவதன் மூலமாகவும் அமெரிக்காவில் நச்சு ஊசி ஏற்றுவதன் மூலமாகவும் இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டும் மத்திய கிழக்கு நாடுகளில் தலையை வாளால் வெட்டியும் கல்லால் அடித்தும் மரண தண்டனையை நிறைவேற்றுகின்ற முறைமை உண்டு.

எனினும் மரண தண்டனை வழங்குகின்ற போது குறித்த உயிர் வதைபடாமல்; மற்றவர்கள் அது குறித்து ஜீரணிக்க முடியாமல் இருக்கக்கூடாது என்பது மனித நேயத்தின் அடிப்படை. அந்த வகையில் வாளால் வெட்டுதல், கல்லால் அடித்து கொல்லுதல் என்பன மனிதத்தால் ஜீரணிக்க முடியாதவை.

எனவே, மரண தண்டனை என்ற விடயத்தில் தூக்கில் இடுதல், துப்பாக்கியால் சுடுதல், நச்சு­ ஊசி ஏற்றிக் கொல்லுதல் என்பதில் தூக்கில் இடுதலும், துப்பாக்கியால் சுடுதலும் ஜீரணிக்க முடியாத தண்டனைக்குள் இடம்பெறக் கூடியவை.

அப்படியாயின் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை சித்திரவதைப்படுத்தாமல், ஒரு கணப்பொழுதில் மரணம் அடையச் செய்யக்கூடியது நச்சு ஊசி ஏற்றிக் கொல்லுதல்

ஆகவே இருக்க முடியும். எதுவாயினும் மரண தண்டனையை நிறைவேற்றுதல் என்பது நடக்காத போது மரண தண்டனை சமூகத்துக்கு ஓர் எச்சரிக்கையாக அமையாது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அடிப்பது சரியா? தவறா?
» ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு நிறைவடைந்தது! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு [ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 05:53.58 AM ] [Photo] ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணை இன்று நிறைவடைவதால் வழக்கின் தீர்ப்பு திகதி இன்று
» நல்ல தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum