Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திருடர்களைப் பிடிக்க எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு அவசியம்: பிரதமர்

Go down

திருடர்களைப் பிடிக்க எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு அவசியம்: பிரதமர் Empty திருடர்களைப் பிடிக்க எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு அவசியம்: பிரதமர்

Post by oviya Wed Jun 03, 2015 3:12 pm

திருடர்களைப் பிடிக்க எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு அவசியம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கம் நிபுணர்களை ஈடுபடுத்தி வருகின்றது.

திருடர்களை எதிர்க்கட்சி பாதுகாக்க கூடாது. அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த ஒத்துழைப்பு வேண்டும்.

மத்திய வங்கியின் ஆளுனர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது நாடாளுமன்றில் பிரதமர் இதனைத் தெரித்துள்ளார்.

கடந்த காலத்தில் ஒரு குடும்பம் மட்டுமே போசிக்கப்பட்டதாகவும், நாட்டின் அனைத்து குடும்பங்களையும் போசிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநரின் குடியுரிமை பற்றி கேள்வி எழுப்புவது நியாயமற்றது - பிரதமர்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பது நியாயமற்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அரசாங்கத்தின் உடன்பட முடியாத செயற்பாடுகள் காரணமாகவே அர்ஜூன் மகேந்திரன் நாட்டை விட்டுச் சென்றார் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, அர்ஜூன் மகேந்திரனின் குடியுரிமை தொடர்பாக பிரச்சினை எழுப்பிய போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

பிரதமர் பதிலளிக்க முயற்சித்த போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அப்போது நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது.

தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், அர்ஜூன் மகேந்திரன் நாட்டை விட்டு சென்றிருக்காவிட்டால், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவுக்கு நேர்ந்த கதியே அவருக்கும் நேர வாய்ப்பிருந்தது.

முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை வகித்தது அமெரிக்க பிரஜை ஒருவர் என்ற நிலையில், மத்திய வங்கி ஆளுநர் குறித்து பிரச்சினை எழுப்பது நியாயமற்றது.

அத்துடன் சேவையாற்ற கூடியவர்களை நாட்டை விட்டு அனுப்பும் கொள்கை அரசாங்கத்திடம் இல்லை. சேவையாற்றக் கூடியவர்களை நாட்டுக்கு வரவழைக்கும் யுகம் ஏற்படுத்தப்படும்.

தினேஷ் குணவர்தன போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சுதந்திரமாக பேச வாய்ப்பு கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி ஏற்படுகிறது.

ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பேசக் கூடியவர்கள் அமைதியாக இருக்க நேரிட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசியல் அமைப்பு திருத்தங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு அவசியம்: சம்பிக்க
» விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன்!– பசில்
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum