Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கூட்டமைப்புக்கு ஆதரவினை வழங்கியமைக்காக கொடுப்பனவை நிறுத்திய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்! தர்மபுரம் மக்கள்

Go down

கூட்டமைப்புக்கு ஆதரவினை வழங்கியமைக்காக கொடுப்பனவை நிறுத்திய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்! தர்மபுரம் மக்கள் Empty கூட்டமைப்புக்கு ஆதரவினை வழங்கியமைக்காக கொடுப்பனவை நிறுத்திய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்! தர்மபுரம் மக்கள்

Post by oviya Tue Jun 02, 2015 2:48 pm

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எமது ஆதரவினை வழங்கியமைக்காக சமுர்த்திக் கொடுப்பனவினை நிறுத்தியுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் கிளிநொச்சி மாவட்டம், தர்மபுரம், கட்டைக்காடு பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டைக்காடு மக்களின் வேண்டுகோளுக்கிணங்க கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்ட இச்சந்திப்பு தலைவர் த.மகேந்திரராசா தலைமையில் நடைபெற்றது.

மக்கள் தமது கருத்துக்களை முன்வைக்கும் போது நாம் கடந்த தேர்தல் காலங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எமது ஆதரவினை வழங்கியமைக்காக சமுர்த்திக் கொடுப்பனவினை நிறுத்தியுள்ளனர்.

சில சமுர்த்தி உத்தியோகத்தர் தமது கடமைகளை மறந்து அரசியல் இலாபத்திற்காக எம்மைப் போன்ற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற விதத்தில் இன்று வரைக்கும் செயற்படுவது மனவேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் தமது கருத்துக்களை முன்வைக்கும் போது தற்காலத்தில் ஏற்படுகின்ற சமூக சீர்கேடுகள் தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

முக்கியமாக தமிழ் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் வல்லுறவுகள் மற்றும் தமிழினத்தை அதிலும் இளைஞர்களை சீர்கெடுத்து திட்டமிட்டு அழிப்பதற்காக இங்கு கொண்டு வரப்பட்டுள்ள போதைப் பொருட்கள் என்பவற்றிலிருந்து விடுபடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக விழிப்புக்குழு அமைக்கப்பட வேண்டும்.

இதற்கு தமது பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் உறுதி பூண்டனர். மேலும் தமது பிரச்சினைகளை முன்வைக்கும் போது வீதி புனரமைப்பு, கல்வி, விடுபட்ட வீட்டுத்திட்டங்கள், காணிப் பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன.

இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கதைத்து பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதாகவும் கூறினார்.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிரதேசசபை உறுப்பினர் ம.புஸ்பராசா, நெடுந்தீவு பகுதியின் செயற்பாட்டாளர் திரு.கண்ணன், கட்டைக்காடு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் த.மகேந்திரம்,செயலாளர் ப.தயானந்தன் மற்றும் கட்டைக்காட்டு பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum