Top posting users this month
No user |
பந்துலவின் சவாலை ஏற்கும் ரவி கருணாநாயக்க
Page 1 of 1
பந்துலவின் சவாலை ஏற்கும் ரவி கருணாநாயக்க
இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் தொடர்பில் கலந்துரையாட தொலைக்காட்சி விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன விடுத்த சவாலை, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும், மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனும் நிதித்தொடர்பில் போலியான தகவல்களை வழங்கி வருவதாக நேற்று முன் தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பந்துல குணவர்தன குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அல்லது கொள்கை திட்டமிடல் துறை பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரை விவாதத்திற்கு வருமாறு பந்துல சவால் விடுத்திருந்தார்.
தொலைக்காட்சி விவாதத்திற்கு வருவதற்கு தான் தயார் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பந்துலவின் சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்றைய தினம் தானும் இது குறித்து விவாதிப்பதற்கான சந்தர்ப்பத்தை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஹர்சா டி சில்வா தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
அரசியலமைப்புச் சட்டத்தின் உத்தேச 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை முன்வைக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இந்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் முன்னர் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை விட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முக்கியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ,
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசியலமைப்புச் சபைக்கு அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க மற்றும் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் நியமிக்கப்பட்டமை தவறான நடவடிக்கை என இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சபைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களே நியமிக்கப்பட வேண்டும் என அமைச்சர்களை நியமிப்பதால், சபையின் பணிகளுக்கு தடையேற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர்கள் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரை பிரதிநிதித்துவம் செய்வதால் அரசியலமைப்புச் சபையின் சில நடவடிக்கைகளுக்கு தடையேற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும், மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனும் நிதித்தொடர்பில் போலியான தகவல்களை வழங்கி வருவதாக நேற்று முன் தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பந்துல குணவர்தன குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அல்லது கொள்கை திட்டமிடல் துறை பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரை விவாதத்திற்கு வருமாறு பந்துல சவால் விடுத்திருந்தார்.
தொலைக்காட்சி விவாதத்திற்கு வருவதற்கு தான் தயார் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பந்துலவின் சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்றைய தினம் தானும் இது குறித்து விவாதிப்பதற்கான சந்தர்ப்பத்தை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஹர்சா டி சில்வா தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
அரசியலமைப்புச் சட்டத்தின் உத்தேச 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை முன்வைக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இந்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் முன்னர் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை விட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முக்கியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ,
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசியலமைப்புச் சபைக்கு அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க மற்றும் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் நியமிக்கப்பட்டமை தவறான நடவடிக்கை என இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சபைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களே நியமிக்கப்பட வேண்டும் என அமைச்சர்களை நியமிப்பதால், சபையின் பணிகளுக்கு தடையேற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர்கள் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரை பிரதிநிதித்துவம் செய்வதால் அரசியலமைப்புச் சபையின் சில நடவடிக்கைகளுக்கு தடையேற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum