Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


புத்திஜீவிகள் விமர்சனம் செய்யலாம்! சாதாரண மக்களே ஆட்சியைத் தீர்மானிக்கின்றனர்

Go down

புத்திஜீவிகள் விமர்சனம் செய்யலாம்! சாதாரண மக்களே ஆட்சியைத் தீர்மானிக்கின்றனர்  Empty புத்திஜீவிகள் விமர்சனம் செய்யலாம்! சாதாரண மக்களே ஆட்சியைத் தீர்மானிக்கின்றனர்

Post by oviya Fri Dec 26, 2014 2:23 pm

இவ்வாறான நிலைமைக்கு பயம் ஒரு காரணம் என்றால், தேர்தல் ஒழுங்கான முறையில் நடக்குமோ என்ற சந்தேகம் மறுகாரணம் எனலாம்.

எதுவாயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவுடன் நின்றவர்கள் மைத்திரியின் பக்கம் தாவிச் செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தேர்தலுக்கு முதல்நாள் மிக நெருக்கமானவர்களும் போய் விடுவார்களோ என்று நினைக்கும் அளவில் நிலைமை மோசமாகி வருவதைக் காண முடிகிறது.

இத்தகைய மாற்றங்கள் தென்பகுதிப் புத்திஜீவிகளின் கடுமையான விமர்சனங்களால் ஏற்பட்டதாகும்.

ஆட்சி மாற்றம் தேவையெனத் தென்பகுதி புத்திஜீவிகள் கருதுகின்றனர். இனியும் சேர்ந்திருக்க முடியாதென்பது தாவிச் செல்லும் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு.

ஆக, தென்பகுதியைச் சேர்ந்த புத்திஜீவிகளும், அரசியல்வாதிகளும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகின்றனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

எனினும் இலங்கையில் புத்திஜீவிகள் விமர்சனம் செய்யக் கூடியவர்களாகவும் கருத்துரைக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனரே தவிர, ஆட்சியைத் தீர்மானிக்கும் பெரும்பலத்தை தென்பகுதியைச் சேர்ந்த சாதாரண மக்களே கொண்டுள்ளனர் என்ற உண்மை மறப்பதற்குரியதல்ல.

எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கப் போகின்றவர்கள் சாதாரண மக்கள் என்பதால், அவர்களின் எண்ணம் எப்படியாக உள்ளது என்று ஆராய்வது அவசியம்.

பொதுவாக புத்திஜீவிகளின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் கொண்டு ஒரு முடிவுக்கு வருவது தவறு என்பது நம் தாழ்மையான கருத்து.

ஆக, தென்பகுதியில் ஆட்சியை, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சாதாரண மக்கள் இன்னமும் விடுதலைப் புலிகளை வென்ற மகிழ்வில் இருக்கிறார்களா? அல்லது சாதாரண வாழ்வு நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது என்று உணர்கிறார்களா? என்பதை அறிவது அவசியம்.

இவை ஒருபுறம் இருக்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவின் ஆதரவாளர்கள் நாளுக்கு நாள் மைத்திரியின் பக்கம் நகர்ந்து செல்வதைப் பார்க்கும் போது மகிந்த ராஜபக்­வின் ஆட்சியில் இவர்கள் கடுமையான பாதிப்புக்கு அல்லது வெறுப்புக்கு ஆளாகி உள்ளனர் என்பதை உணர முடியும்.

அதேநேரம் மகிந்த ராஜபக்ச­ மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் தமக்கு என்ன நடக்கும்? என்பது கட்சி மாறும் அரசியல்வாதிகளுக்குத் தெரியாததல்ல.

நிலைமையைத் தெரிந்திருந்தும் மைத்திரியின் பக்கம் ஓடுகின்ற அரசியல் வாதிகளின் ஓட்ட வேகத்தைப் பார்க்கும் போது கயிறு இழுத்தல் போட்டியில், மைத்திரியே வெல்ல வேண்டும் என்பதில் தென்பகுதி அரசியல்வாதிகள் அதிதீவிரமாக உள்ளனர் என்பது புரிகிறது.

இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, வடக்கு கிழக்கு தமிழர்கள் அமைதியாகத் தேர்தல் நாளைப் பார்த்துக் காத்திருக்கின்றனர்.

யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவில் மிகத் தெளிவாக இருக்கும் தமிழ் மக்கள் தங்களின் தீர்மானத்தை மிகச் சிறப்பாகச் செய்வார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

எதுவாயினும் சாதாரண மக்களின் வாக்குகள் குறித்து மகிந்த கொண்டுள்ள கரிசனை மைத்திரியிடம் இருந்தால் போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறலாம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum