Top posting users this month
No user |
மகிந்த ராஜபக்சவின் விகாரை அரசியலை கண்டிக்கிறார் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க
Page 1 of 1
மகிந்த ராஜபக்சவின் விகாரை அரசியலை கண்டிக்கிறார் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விகாரை அரசியலை கண்டிப்பதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அலுவலகத்தில் நேற்று நடந்த சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் அனைவருக்கும் பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. என்னிடம் இருக்கும் கருத்து ஏனையோரிடம் இருப்பதில்லை.
முன்னாள் ஜனாதிபதி முன்னெடுத்து வரும் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் கிராமங்களுக்கு சென்று மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் சந்திப்பதை நிறுத்தும் அவசியம் எமக்கில்லை.
அது ஜனநாயகம், விகாரைகளுக்கு சென்று அங்கு மக்களை வரவழைத்து அரசியல் செய்வதே அவர் செய்யும் தவறான செயல். விகாரைகளில் அரசியல் செய்வதை எம்மால் அங்கீகரிக்க முடியாது.
இதுவரையில் நான் விகாரைகளில் அரசியல் செய்ததில்லை. விகாரைகளுக்கு செல்லும் மக்கள் சாது சாது என்று கூறுவார்கள். ஆனால் தற்போது வாழ்க வாழ்க என்று கோஷம் போடும் நிலைமை விகாரைகளில் உருவாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாத்திரமல்ல பௌத்த கலாசாரமும் அழிந்து போகும். புத்தி தெளிவு ஏற்பட்டு அவர் இந்த செயலை நிறுத்தி விடுவார் என நான் எண்ணுகிறேன்.
முன்னாள் ஜனாதிபதி மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளை அருவருக்கத்தக்கதாக கருதி நான் கண்டிக்கின்றேன் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அலுவலகத்தில் நேற்று நடந்த சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் அனைவருக்கும் பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. என்னிடம் இருக்கும் கருத்து ஏனையோரிடம் இருப்பதில்லை.
முன்னாள் ஜனாதிபதி முன்னெடுத்து வரும் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் கிராமங்களுக்கு சென்று மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் சந்திப்பதை நிறுத்தும் அவசியம் எமக்கில்லை.
அது ஜனநாயகம், விகாரைகளுக்கு சென்று அங்கு மக்களை வரவழைத்து அரசியல் செய்வதே அவர் செய்யும் தவறான செயல். விகாரைகளில் அரசியல் செய்வதை எம்மால் அங்கீகரிக்க முடியாது.
இதுவரையில் நான் விகாரைகளில் அரசியல் செய்ததில்லை. விகாரைகளுக்கு செல்லும் மக்கள் சாது சாது என்று கூறுவார்கள். ஆனால் தற்போது வாழ்க வாழ்க என்று கோஷம் போடும் நிலைமை விகாரைகளில் உருவாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாத்திரமல்ல பௌத்த கலாசாரமும் அழிந்து போகும். புத்தி தெளிவு ஏற்பட்டு அவர் இந்த செயலை நிறுத்தி விடுவார் என நான் எண்ணுகிறேன்.
முன்னாள் ஜனாதிபதி மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளை அருவருக்கத்தக்கதாக கருதி நான் கண்டிக்கின்றேன் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum