Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அம்பேத்கர், பெரியார் மாணவர் அமைப்புக்கு தடை : சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது!

Go down

அம்பேத்கர், பெரியார் மாணவர் அமைப்புக்கு தடை : சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது! Empty அம்பேத்கர், பெரியார் மாணவர் அமைப்புக்கு தடை : சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது!

Post by oviya Sat May 30, 2015 12:15 pm

சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர், பெரியார் மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டி.யில் செயல்பட்டு வந்த பெரியார்-அம்பேத்கர் மாணவர் அமைப்புக்கு மோடி தலைமையிலான ஆட்சியை விமர்சித்ததற்காக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் (Ambedkar-Periyar Study Circle (APSC) என்ற பெயரிலான இந்த மாணவர் அமைப்பு, அம்பேத்கர், பெரியார் சிந்தனைகளையும் பரப்பி வந்தது.

மத்திய மனிதவள மேம்பாட்டு ஆணையம் பரிந்துரைத்ததன் பேரில் மேற்கூறிய மாணவர் அமைப்புக்கு சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ஐ.ஐ.டி. நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சமூக வலை தளங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகத்தைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஐ.ஐ.டி. வளாகத்திற்கு எதிரே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், மறியல் செய்த அனைத்து அமைப்பினரும் கைது செய்யப்பட்டனர்.

அனுமதிபெறாமல் திடீர் என செய்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், அம்பேத்கார், பெரியார் மாணவர் அமைப்பினர் மீதான தடையை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum