Top posting users this month
No user |
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விட்ட நபர்! பொலிசார் தீவிர தேடுதல்
Page 1 of 1
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விட்ட நபர்! பொலிசார் தீவிர தேடுதல்
இந்திய பிரதமர் மோடிக்கு வாட்ஸ் ஆப்பில் கொலை மிரட்டல் விடுத்த நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பா.ஜ.க. அரசின் ஓராண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி, உத்தரபிரதேச மாநிலம், மதுரா செல்கிறார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 20ஆம் திகதி, மதுரா நகர காவல்துறை உயர் அதிகாரியின் செல்போனுக்கு வாட்ஸ் ஆப் மூலம் ஒரு மிரட்டல் வந்தது.
அதில் 'மதுரா வரும்போது நரேந்திர மோடி கொலை செய்யப்படுவார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, செய்தி அனுப்பப்பட்ட செல்போன் நம்பரை ஆய்வு செய்ததில், மோடிக்கு மிரட்டல் செய்தி அனுப்பியவர், மதுரா மாவட்டம், நவ்லி கிராமத்தை சேர்ந்த ராம்வீர் என்பவர் எனத் தெரியவந்தது.
மேலும், அவர் போலி பெயரில் சிம்கார்டு வாங்கி மிரட்டல் விடுத்திருந்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்யும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த அந்த நபர் ஓடி தலைமறைவாகி விட்டார். ராம்வீரின் சகோதரர் லட்சுமணனை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான ராம்வீரரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
பா.ஜ.க. அரசின் ஓராண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி, உத்தரபிரதேச மாநிலம், மதுரா செல்கிறார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 20ஆம் திகதி, மதுரா நகர காவல்துறை உயர் அதிகாரியின் செல்போனுக்கு வாட்ஸ் ஆப் மூலம் ஒரு மிரட்டல் வந்தது.
அதில் 'மதுரா வரும்போது நரேந்திர மோடி கொலை செய்யப்படுவார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, செய்தி அனுப்பப்பட்ட செல்போன் நம்பரை ஆய்வு செய்ததில், மோடிக்கு மிரட்டல் செய்தி அனுப்பியவர், மதுரா மாவட்டம், நவ்லி கிராமத்தை சேர்ந்த ராம்வீர் என்பவர் எனத் தெரியவந்தது.
மேலும், அவர் போலி பெயரில் சிம்கார்டு வாங்கி மிரட்டல் விடுத்திருந்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்யும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த அந்த நபர் ஓடி தலைமறைவாகி விட்டார். ராம்வீரின் சகோதரர் லட்சுமணனை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான ராம்வீரரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum