Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கை அரசாங்க பத்திர விவகாரம்! ரணிலின் மிரட்டலுக்கு வங்கி அதிகாரியின் பதில்: விக்கிலீக்ஸ் தகவல்

Go down

இலங்கை அரசாங்க பத்திர விவகாரம்! ரணிலின் மிரட்டலுக்கு வங்கி அதிகாரியின் பதில்: விக்கிலீக்ஸ் தகவல் Empty இலங்கை அரசாங்க பத்திர விவகாரம்! ரணிலின் மிரட்டலுக்கு வங்கி அதிகாரியின் பதில்: விக்கிலீக்ஸ் தகவல்

Post by oviya Mon May 25, 2015 12:40 pm

இலங்கை அரசாங்க பத்திர விவகாரம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள மிரட்டலுக்கு எச்.எஸ்.பி.சி (HSBC) வங்கி அதிகாரி தெரிவித்த கருத்தை விக்கிலீக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச, இலங்கை தேசத்தின் வளர்ச்சி பணிகளுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து நிதி உதவியை நாடினார்.

சர்வதேச நாடுகளின் நிதியை பெறுவதற்காக இலங்கை அரசாங்க பத்திரத்தை பிணையமாக வைத்து சுமார் 500 மில்லியன் டொலர்களை பெறுவதற்கு திட்டமிட்டார்.

இதனை தொடர்ந்து, 40 சதவிகித அமெரிக்க முதலீட்டாளர்கள் உட்பட சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கை பத்திரத்தை பிணையத்தின் அடிப்படையில் 500 மில்லியன் டொலர்களுக்கு வாங்கினர்.

இதனை அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ரணில் விக்கிரமசிங்க கடுமையாக எதிர்த்தார்.

அதாவது, எதிர்காலத்தில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், முந்தைய அரசாங்கம் பத்திரத்தை பிணையமாக வைத்து வாங்கியுள்ள 500 மில்லியன் டொலரை திருப்ப செலுத்த முடியாது என்றும், அதற்குரிய முக்கியத்துவத்தை தனது அரசாங்கம் அளிக்காது என மிரட்டல் விடுத்திருந்தார்.

ரணிலின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கையில் உள்ள HSBC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கூறிய கருத்தை விக்கி லீக்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் திகதி, இலங்கையில் அமெரிக்க தூதரக அதிகாரியாக இருந்த ரொபேர்ட் ஓ. பிளேக் என்பவர் அமெரிக்க அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த கடித்தில் உள்ள தகவல்களை தான் தற்போது விக்கி லீக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரணில் விக்கரமசிங்க விடுத்த மிரட்டலுக்கு பதில் அளித்த HSBCயின் தலைமை நிர்வாக அதிகாரி, “ரணில் விடுத்துள்ள இந்த மிரட்டல் வேடிக்கையாக உள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது.

மகிந்த அரசு செய்த பத்திர ஒப்பந்தத்தை ரணில் ஒரு காலமும் தள்ளுபடி செய்யவோ, நிராகரிக்கவோ முடியாது. அதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பே இல்லை.

மேலும், எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு குறித்து சர்வதேச சந்தைகளுக்கு கவலை இல்லை என கூறியுள்ளதாக விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum