Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கல்வி என்ற இலக்கினூடாக பல்வேறு வெற்றிகளை பெற வேண்டும்: சி.சிறீதரன் பா.உ

Go down

கல்வி என்ற இலக்கினூடாக பல்வேறு வெற்றிகளை பெற வேண்டும்: சி.சிறீதரன் பா.உ Empty கல்வி என்ற இலக்கினூடாக பல்வேறு வெற்றிகளை பெற வேண்டும்: சி.சிறீதரன் பா.உ

Post by oviya Mon May 25, 2015 12:28 pm

கிளிநொச்சி பாரதிபுரம் ஒக்ஸ்போட் தனியார் கல்வி நிறுவனத்தின் பருத்தி விழாவும் பரிசளிப்பு விழாவும் நேற்று வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
கல்வி நிலையத்தின் இயக்குனர் கே.எம்.கேதீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக பா.உறுப்பினர் சி.சிறீதரன் கலந்து கொண்டார்.

பாரதிபுரத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடசாலையில் புறச்செயற்பாடாக மாணவர்கள் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் தங்கள் பொழுதை சிறந்த முறையில் ஆக்குவதற்காக இத்தகைய கல்வி நிலையங்களின் பங்கு அளப்பரியது.

ஒக்ஸ்போட் கல்வி நிலையத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கு சில தரப்புக்களால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இந்தப்பிரதேச மக்கள் இந்த கல்வி நிலையம் மாணவர்களின் வளர்ச்சியில் ஆற்றுகின்ற பங்களிப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையின் நிமித்தம் தடைகளை வென்று நடைபோடுவது மகிழ்ச்சி தருகின்றது.

கல்வி என்ற இலக்கினுடாகவே நாம் இந்த பல்வேறு இலக்குகளை அடைந்து வெற்றி பெற வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதற்கு இக்கல்வி நிலையமும் தன்னாலான பங்களிப்பை செய்து வருகின்றது.

இன்று இந்த விழாவில் பரிசுகளை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நாமும் இந்தப்பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் முடிந்த அளவில் பங்கெடுப்போம் என தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற கிளிநொச்சி பாரதிபுரம் ஒக்ஸ்போட் கல்வி நிலையத்தின் நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினர்களாக பளை ஓய்வு நிலை கோட்ட கல்வி பணிப்பாளர் ஆனந்தசிவம், இலண்டன் ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய பிரதிநிதி ப.சந்திரகுமார், கௌரவ விருந்தினர்களாக பாரதிபுரம் அன்னைசாரதா தேவி வித்தியாலய முதலவர் கணேஸ்வரநாதன், ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலை முதல்வர் உமாசங்கர், நொச்சிக்குளம் அ.த.க.பாடசாலை முதல்வர் ஜெயக்குமார், ஓய்வுநிலை அதிபர் அ.கனகரத்தினம் ஓய்வுநிலை அதிபர் இராஜேந்திரம், கிளிநொச்சி கந்தசுவாமி தேவஸ்தான குருக்கள் சர்வ வித்தியாகலாமணி சாம ஸ்ரீ தேசிக சிவாச்சாரியார், தென்னிந்திய திருச்சபை போதகர் எஸ்.துரைரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் இலண்டன் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தால் மாணவருக்கு துவிச்சக்கர வண்டியும் நிதியுதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum