Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பாதி எரிந்த நிலையில் சடலமொன்றை கொண்டு சென்றவர்கள் கைது

Go down

பாதி எரிந்த நிலையில் சடலமொன்றை கொண்டு சென்றவர்கள் கைது             Empty பாதி எரிந்த நிலையில் சடலமொன்றை கொண்டு சென்றவர்கள் கைது

Post by oviya Sun May 24, 2015 3:14 pm

பாதி எரிந்த நிலையில் சடலமொன்றை கொண்டு சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகனமொன்றில் பாதி எரிந்த நிலையில் சடலமொன்றை எடுத்துச் சென்ற இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

வெளிச்சம் போட்டு மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் போது வெளிச்சம் பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறி கடற்படையினர் சனிக்கிழமை இரண்டு படகுகளையும், அதன் பொருட்களையும் கைப்பற்றி கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் சிறிய படகுகள் ஜெனரேட்டர் பாவித்து வெளிச்சம் ஏற்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று கடற்றொழில் திணைக்களம் அறிவித்து பெற்றிகள் மூலம் வெளிச்சத்தை ஏற்படுத்தலாம் என்று கூறியதற்கிணங்க மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த போது கடற்படையினர் பாசிக்குடாவில் உள்ள இரண்டு படகுகளையும்,அதில் உள்ள பொருட்களையும் மீன் பிடியில் ஈடுபட்ட ஐந்து பேரையும் கைது செய்து கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொருட்களை கைப்பற்றிய கடற்றொழில் பரிசோதகர் எம்.எல்.எம்.முர்ஜிஸ் இப் பொருட்களை மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைப்பதாகவும், இம் மீனவர்களது பிரச்சினை தொடர்பாக எதிர்வரும் திங்கள்கிழமை மாவட்டக் காரியாலயத்தில் மீனவர்களுக்கும், மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம் பெற்று தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், கடலில் மீன்பிடியில் ஈடுபடும் போது வெளிச்சம் இல்லாமல் இருப்பது எங்களது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். நாங்கள் வெளிச்சம் இல்லாமல் இருக்கும் போது பெரிய கப்பல்கள் மூலம் நாங்கள் தாக்கப்படலாம் வெளிச்சத்துடன் இருக்கும் போது பெரிய கப்பல்கள் வரும் போது வெளிச்சத்தைக் கண்டு விளகிச் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது

எனவே நாட்டில் எல்லா இடங்களிலும் வெளிச்சம் போட்டு படகுகள் தொழில் செய்யும் போது பாசிக்குடா கடற்பரப்பில் மட்டும் ஏன் தொழில் செய்ய முடியாமல் உள்ளது என்று தெரியாமல் உள்ளது என்றும், உரிய அதிகாரிகள் இது தொடர்பாக உரிய தீர்வை விரைவில் பெற்றுத்தர வேண்டும் என்றும், இல்லையேல் நாங்கள் வீதியில் இறங்கி தீர்வு கிடைக்கும் வரை பேராடுவோம் என்றும் தெரிவித்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum