Top posting users this month
No user |
நாமலுக்கு புகழ்பாடிய அர்ஜுன ரணதுங்க
Page 1 of 1
நாமலுக்கு புகழ்பாடிய அர்ஜுன ரணதுங்க
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ஏற்றாற் போல் அரசியல் அரங்கில் மிகவும் புத்திசாதுர்யமாக செயற்பட்டு வருகின்றார் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே துறைமுகம் மற்றும் கப்பற்போக்குவரத்து அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது புதல்வர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியிருக்கலாம்.
நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்ட எந்தவொரு விடயத்திலும் நாமல் ராஜபக்ஸ பங்கேற்காமையை இதற்கு சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது தேவையற்ற கூட்டங்கள், பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்காமை ஒரு புத்தியுள்ள அரசியல்வாதியின் சிறந்த குணங்களாக காணப்படுகின்றது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது மூளையை தெளிவாக பயன்படுத்தி அரசியல் காய்நகர்த்தி வருகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போர்களது மூளையை பயன்படுத்த வேண்டாம் எனவும்,
அவர்களின் உணர்வுகளை பயன்படுத்தி அரசியல் செய்வதுடன், பிரச்சினைகளிலும் மாட்டிக்கொள்ள வழிவகுக்கின்றனர் எனவும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே துறைமுகம் மற்றும் கப்பற்போக்குவரத்து அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது புதல்வர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியிருக்கலாம்.
நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்ட எந்தவொரு விடயத்திலும் நாமல் ராஜபக்ஸ பங்கேற்காமையை இதற்கு சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது தேவையற்ற கூட்டங்கள், பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்காமை ஒரு புத்தியுள்ள அரசியல்வாதியின் சிறந்த குணங்களாக காணப்படுகின்றது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது மூளையை தெளிவாக பயன்படுத்தி அரசியல் காய்நகர்த்தி வருகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போர்களது மூளையை பயன்படுத்த வேண்டாம் எனவும்,
அவர்களின் உணர்வுகளை பயன்படுத்தி அரசியல் செய்வதுடன், பிரச்சினைகளிலும் மாட்டிக்கொள்ள வழிவகுக்கின்றனர் எனவும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum