Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மட்டக்களப்பில் மூன்று பெண் குழந்தைகளை பெற்ற தாயின் நிலை.

Go down

மட்டக்களப்பில் மூன்று பெண் குழந்தைகளை பெற்ற தாயின் நிலை. Empty மட்டக்களப்பில் மூன்று பெண் குழந்தைகளை பெற்ற தாயின் நிலை.

Post by oviya Sat May 23, 2015 1:26 pm

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் மூன்று பெண்பிள்ளைகளை பெற்ற தாய் தனது குழந்தைகளை வளர்ப்பதற்கு மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றார்
மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதேசத்தில் வசிக்கும் சுதாகரன் மேகானந்தி(30) கடந்த 25 நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மூன்று பெண்பிள்ளைகளை பெற்றெடுத்தார். இவருக்கு ஏற்கனவே எட்டு வயதில் ஒரு பெண்பிள்ளையும் உண்டு.



தகரத்தினால் அடைக்கப்பட்ட கொட்டகைக்குள்ளேயே வாழ்ந்து வருவதாகவு தனது கணவர் இளம்பிள்ளைவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் தனது குழந்தைகளை வளர்ப்பதற்கு யாராவது உதவ முன்வருமாறு லங்காசிறியிடம் தெரிவித்தார்.

தமிழர்களின் இன விகிதாசாரத்தை காப்பாற்ற அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்: யோகேஸ்வரன் ( 0094776034559 )



வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக இருந்த தமிழ் சமூகம் எதிர்காலத்தில் சிறுபான்மை இனமாக சென்று விடுவோ என்கின்ற கவலையே தற்பொழுது ஏற்படுத்துகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மாவடி வேம்பு பகுதியில் மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்த தாய்க்கு அன்புத் துளிர் அமைப்பு வழங்கிய உதவித்தொகையினை வழங்கியதன் பின்னர் லங்கா சிறி வானொலிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் அதிகமாக வாழ்ந்த தமிழினம் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்திருக்கின்றார்கள். லட்சக்கணக்கில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.ஆகவே இந்த தமிழினத்தின் விகிதாசாரம் இன்று பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது. இன்று இருக்கின்ற தமிழ்ச் சமூகம் தாங்கள் இருவர் தமக்கு ஒருவர் அல்லது இருவர் என்று குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு அதோடு குழந்தைகளை பெற்றுக்கொள்வதை நிறுத்திக்கொள்கின்றார்கள். இதுவே தமிழ் மக்களின் குடிசனத் தொகை குறைந்த கொண்டு செல்கின்றது காரணம்.

ஆனால் இலங்கையின் ஏனைய இனத்தவர்கள் பெரும்பாலான பிள்ளைகளை பெற்றெடுப்பதனால் இன்று அவர்கள் சனத்தொகையில் அதிகமாக இருக்கின்றார்கள்.

வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக இருந்த தமிழ் சமூகம் எதிர்காலத்தில் சிறுபான்மை இனமாக சென்று விடுவோ என்கின்ற கவலையை ஏற்படுத்துகின்றது. எங்களுடைய இன விகிதாசாரத்தை காப்பாற்ற வேண்டுமாயின் அதிகமான குழந்தைகளை தமிழ்ச் சமூகம் பெற்றெடுக்க வேண்டும் என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum