Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஐயப்பன் அவதார கதை

Go down

ஐயப்பன் அவதார கதை        Empty ஐயப்பன் அவதார கதை

Post by oviya Tue Dec 23, 2014 3:13 pm

ஐயப்பன் தன் அவதார நிகழ்வுக்காக குழந்தை வடிவம் எடுத்து காட்டுக்குள் கிடந்தார். காட்டில் விழுந்துகிடந்த அந்த குழந்தையை பந்தள மன்னர் ராஜசேகரன் கண்டார். குழந்தை இல்லாத அவர் அக்குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்றார்.

செல்லும் வழியில் முதியவர் வடிவில் தோன்றிய திருமால் குழந்தையின் கழுத்தில் கனகமணி மாலை ஒன்றை சூட்டி, மணிகண்டன் என்று குழந்தைக்கு பெயர் சூட்டினார். குழந்தையுடன் அரண்மனைக்கு சென்றதும், மகாராணியும் மகிழ்ச்சி அடைந்தாள். மணிகண்டன் சென்ற வேளையில் அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு ராஜராஜன் என பெயர் சூட்டினர். தனக்கென்று குழந்தை பிறந்தாலும் பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார். இதை வஞ்சனை நிறைந்த அமைச்சர் ஒருவர் விரும்பவில்லை. மகாராணியின் மனதை மாற்றி, ராஜராஜனுக்கு முடிசூட்டும்படி கூறினார். மகாராணியும் மணிகண்டனான ஐயப்பனை கொல்வதற்காக தலைவலி வந்ததுபோல நடித்தார்.

மருத்துவர்கள் மூலமாக புலிப்பால் கொண்டு வந்தால்தான் தலைவலி சரியாகும் என கூறச்செய்தாள். மணிகண்டனும் காட்டிற்கு சென்றான். காட்டிலிருந்த பூதகணங்கள் அவரை வரவேற்றன. முனிவர்கள் அவரை பொன்னம்பலத்திற்கு அழைத்துச்சென்று, ரத்தின சிம்மாசனம் அமைத்து, பூஜித்து வழிபட்டனர். இந்த இடமே தற்போது மணிகண்டன் ஜோதியாக காட்சிதரும் பொன்னம்பலமேடு ஆகும்.

அங்கிருந்தபடியே அவர் மகிஷியுடன் போரிட்டார். அவள் அழுதை நதிக்கரையோரம் விழுந்தாள். தன்னை மிதித்துத்தள்ளியது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஒருவனே என்பதை உணர்ந்த மகிஷி உயிர்பிரியும் நேரத்தில் அவரை வணங்கி நின்றாள். ஐயப்பன் அவளது உடலை தன் கரத்தால் தடவவும், அவள் அழகிய உரு பெற்றாள்.

தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென வேண்டினாள். இப்பிறப்பில் பிரம்மச்சாரியாக வாழ முடிவு செய்திருப்பதைக்கூறிய ஐயப்பன் தனது இடப்பாகத்தில் சிறிது துவரத்தில் நிலைகொள்ளும்படி அருள்புரிந்தார். அவளே மஞ்சமாதா என அழைக்கப்படுகிறாள். பின்பு புலிகளுடன் ஐயப்பன் நாட்டுக்கு திரும்பி வந்தார்.

அவரது திறமையை அறிந்த மக்களும் மன்னரும் தலை தாழ்த்தி வணங்கினர். எதிரிகளும் மன்னிப்பு கேட்டனர். பின்பு தனது 12 வயது முடிந்துவிட்டதை மன்னரிடம் உணர்த்திய மணிகண்டன், தான் ஒரு தெய்வப்பிறவி என்பதை ஒப்புக்கொண்டார். அங்கிருந்து ஒரு அம்பை எய்வதாகவும், அது எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு தனக்கு கோயில் கட்டும்படியும் பந்தள மன்னருக்கு அருள்பாலித்தார்.

அதன்படியே பந்தளராஜா கோயில் கட்ட ஏற்பாடு செய்தார். பரசுராமரின் உதவியுடன் மகர சங்கராத்தி நாளில் சனிக்கிழமையன்று கோயில் உருவாக்கப்பட்டது. மாளிகைப்புறத்தம்மை, கருப்பசுவாமி, கடுத்தசுவாமி ஆகியோருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டன. இதனால்தான் சனிக்கிழமைகளில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றுவருவது இரட்டிப்பு பலன் தரும் என்ற ஐதீகம் உள்ளது.*யப்பன் தன் அவதார நிகழ்வுக்காக குழந்தை வடிவம் எடுத்து காட்டுக்குள் கிடந்தார். காட்டில் விழுந்துகிடந்த அந்த குழந்தையை பந்தள மன்னர் ராஜசேகரன் கண்டார். குழந்தை இல்லாத அவர் அக்குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்றார்.

செல்லும் வழியில் முதியவர் வடிவில் தோன்றிய திருமால் குழந்தையின் கழுத்தில் கனகமணி மாலை ஒன்றை சூட்டி, மணிகண்டன் என்று குழந்தைக்கு பெயர் சூட்டினார். குழந்தையுடன் அரண்மனைக்கு சென்றதும், மகாராணியும் மகிழ்ச்சி அடைந்தாள். மணிகண்டன் சென்ற வேளையில் அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு ராஜராஜன் என பெயர் சூட்டினர். தனக்கென்று குழந்தை பிறந்தாலும் பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார். இதை வஞ்சனை நிறைந்த அமைச்சர் ஒருவர் விரும்பவில்லை. மகாராணியின் மனதை மாற்றி, ராஜராஜனுக்கு முடிசூட்டும்படி கூறினார். மகாராணியும் மணிகண்டனான ஐயப்பனை கொல்வதற்காக தலைவலி வந்ததுபோல நடித்தார்.

மருத்துவர்கள் மூலமாக புலிப்பால் கொண்டு வந்தால்தான் தலைவலி சரியாகும் என கூறச்செய்தாள். மணிகண்டனும் காட்டிற்கு சென்றான். காட்டிலிருந்த பூதகணங்கள் அவரை வரவேற்றன. முனிவர்கள் அவரை பொன்னம்பலத்திற்கு அழைத்துச்சென்று, ரத்தின சிம்மாசனம் அமைத்து, பூஜித்து வழிபட்டனர். இந்த இடமே தற்போது மணிகண்டன் ஜோதியாக காட்சிதரும் பொன்னம்பலமேடு ஆகும்.

அங்கிருந்தபடியே அவர் மகிஷியுடன் போரிட்டார். அவள் அழுதை நதிக்கரையோரம் விழுந்தாள். தன்னை மிதித்துத்தள்ளியது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஒருவனே என்பதை உணர்ந்த மகிஷி உயிர்பிரியும் நேரத்தில் அவரை வணங்கி நின்றாள். ஐயப்பன் அவளது உடலை தன் கரத்தால் தடவவும், அவள் அழகிய உரு பெற்றாள்.

தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென வேண்டினாள். இப்பிறப்பில் பிரம்மச்சாரியாக வாழ முடிவு செய்திருப்பதைக்கூறிய ஐயப்பன் தனது இடப்பாகத்தில் சிறிது துவரத்தில் நிலைகொள்ளும்படி அருள்புரிந்தார். அவளே மஞ்சமாதா என அழைக்கப்படுகிறாள். பின்பு புலிகளுடன் ஐயப்பன் நாட்டுக்கு திரும்பி வந்தார்.

அவரது திறமையை அறிந்த மக்களும் மன்னரும் தலை தாழ்த்தி வணங்கினர். எதிரிகளும் மன்னிப்பு கேட்டனர். பின்பு தனது 12 வயது முடிந்துவிட்டதை மன்னரிடம் உணர்த்திய மணிகண்டன், தான் ஒரு தெய்வப்பிறவி என்பதை ஒப்புக்கொண்டார். அங்கிருந்து ஒரு அம்பை எய்வதாகவும், அது எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு தனக்கு கோயில் கட்டும்படியும் பந்தள மன்னருக்கு அருள்பாலித்தார்.

அதன்படியே பந்தளராஜா கோயில் கட்ட ஏற்பாடு செய்தார். பரசுராமரின் உதவியுடன் மகர சங்கராத்தி நாளில் சனிக்கிழமையன்று கோயில் உருவாக்கப்பட்டது. மாளிகைப்புறத்தம்மை, கருப்பசுவாமி, கடுத்தசுவாமி ஆகியோருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டன. இதனால்தான் சனிக்கிழமைகளில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றுவருவது இரட்டிப்பு பலன் தரும் என்ற ஐதீகம் உள்ளது.*
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum