Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தந்தையின் வழியில் நானும்: சஜித்

Go down

தந்தையின் வழியில் நானும்: சஜித் Empty தந்தையின் வழியில் நானும்: சஜித்

Post by oviya Sat May 16, 2015 1:20 pm

எனது தந்தையினால் வீடற்றவர்களுக்கு வீடு பெற்றுக்கொடுக்கும் செயற்திட்டத்தை சர்வதேசமே வரவேற்றது என வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை அமைச்சர் சஜித் பிரே­ம­தாச தெரிவித்துள்ளார்.
ஐம்பதாயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் கண்டி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதியும் அதற்கான உறுதிப்பத்திரமும் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வு கண்டி மலைநாட்டு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஏழை மக்களின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு வீடற்றவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் திட்டம் ஒன்றினை எனது தந்தையார் அமரர் ரணசிங்க பிரேமதாச செயற்படுத்தி வந்தார்.

எனினும் இந்த நாட்டில் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக இத்திட்டம் சீர்குலைக்கப்பட்டுவிட்டது. எனினும் எனது தந்தையின் வழியில் செயற்பட்டு அத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு வீடற்றோருக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுத்து, அவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதே எனது பிரதான நோக்கம்.

நான் எனது மாதாந்த சம்பளப்பணத்தை பெறுவதில்லை,அரச வாகனங்களை பயன்படுத்துவதில்லை, அத்துடன் எரிபொருளுக்கான பணத்தை பெறுவதில்லை,இப்பணத்தை கொண்டு ஏழைகளின் வீடற்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு பயன்படுத்திவருகின்றேன்.

இலங்கையில் 51 இலட்சம் குடும்பங்கள் இருக்கின்றன, இதில் 21 இலட்சம் குடும்பங்கள் குறைந்த வருமானம் பெறுபவர்கள்,இவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக எனது பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பேன்.

அத்துடன் வீடில்லாதவர்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான மூலப்பொருட்களை மலிவான விலைகளில் பெற்றுக்கொடுக்க பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum