Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்த அரசின் திருடர்களுக்கு வழிகாட்டிய கோத்தபாய

Go down

மகிந்த அரசின் திருடர்களுக்கு வழிகாட்டிய கோத்தபாய Empty மகிந்த அரசின் திருடர்களுக்கு வழிகாட்டிய கோத்தபாய

Post by oviya Thu May 14, 2015 1:51 pm

உயர் நீதிமன்றத்தினால் நேற்று கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டதன் பின் கடந்த அரசாங்கத்தின் திருடர்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் நிதி மோசடி பிரிவு பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக இரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தீர்ப்பின் பின்னர் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அனைத்து நபர்களும் எதிர்வரும் நாட்களில் அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு மேலதிகமாக நிதி மோசடி பிரிவிற்கும் அதன் அதிகாரிகளுக்கும் எதிராக கூட்டாக மற்றும் தனித்தனியாக சிவில் நீதிமன்றில் நட்டஈடு வழக்கு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் பொலிஸ் நிதி மோசடி பிரிவு தமது விசாரணைகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கான வாய்ப்புகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு கும்பிடு போடும் உயர் நீதிமன்ற சட்டத்தரணிகளிடமிருந்து இதற்கு மேல் எதனையும் எதிர்பார்க்க முடியாது என இது குறித்து ஊடகமொன்றிற்கு தகவல் வழங்கிய இலங்கையின் சட்டத்துறை வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆப்ரா நீதவான் உச்ச நீதிமன்றத்தில் அல்ல வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர், இவ்வாறான ஒருவரை உச்ச நீதிமன்றத்திற்கு நியமித்தது அதற்கு அப்பாற்பட்ட நபராகிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆவார்.

இவரிடம் நீதி, நியாயம் என்பவற்றை எவ்வாறு எதிர்பார்ப்பது? இவ்வாறான அனைத்து நபர்களும் நாளை மீண்டும் மகிந்த ராஜபக்சவை ஆட்சி பீடம் ஏற்றுவார்கள் என பகல் கனவு கண்டுகொண்டே தீர்ப்புக்களை வழங்குவார்கள்.

இச்சூழ்ச்சிகளுக்கு எதிரான மீண்டும் சிவில் சமூகம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் அமரத்தி அடுத்த நாள் வீட்டிற்கு அனுப்பியதன் காரணம் இப்போது தெட்டத்தெளிவாக புரிகிறதா என இலங்கையின் சட்டத்துறை வல்லுநர் கேள்வியெழுப்பியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum