Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!- ரவி கருணாநாயக்க

Go down

மகிந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!- ரவி கருணாநாயக்க Empty மகிந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!- ரவி கருணாநாயக்க

Post by oviya Mon May 11, 2015 12:58 pm

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் கண்மூடித்தனமாக கடன் வழங்கப்படுவதாக அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்து தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதற்கமைய 2000 மில்லியன் நட்டஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த கருத்து தெரிவித்த லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி தலைவர் லசந்த குணவர்தன, வங்கியில் வைப்புகள் இன்றி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 1600 மில்லியனுக்கும் அதிகமாக கடன் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்திரிகாவின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது: மறுக்கும் ரவி கருணாநாயக்க

அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட தற்போதைய அரசாங்கத்திடம் நிதி இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானதென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது, மகிந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாடு நிதி பற்றாக்குறையை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum