Top posting users this month
No user |
நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை: சுசில் எச்சரிக்கை
Page 1 of 1
நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை: சுசில் எச்சரிக்கை
நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவின் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவின் ஒட்டு மொத்த செயற்பாடுகளும் சட்டவிரோதமானவை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்படும் கைது நடவடிக்கைகள் பக்கசார்பான முறையில் காணப்படுவதாகவும், அதன் கைதுகள், விசாரணைகள், நீதிமன்ற ஆஜர்படுத்தல்கள் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் அமையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவின் நடவடிக்கைகளை பிரதமர் தலைமையிலான அமைச்சரவை உப குழுவொன்றே கட்டுப்படுத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மகிந்தவின் ஆட்சி காலத்தில் கடமையாற்றிய அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை உப குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசியல் வரலாற்றில் இவ்வாறான ஓர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் இதுவரை ஒருபோதும் இடம்பெற்றதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்ட போது இவ்விடயம் குறித்து அக்கறை செலுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் முழுமை பெறாத ஓர் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டு அவரை கைது செய்யுமாறு பொலிஸார் நீதவானிடம் கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறே சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவதாகவும், இவ்வாறான அரசியல் பழிவாங்கல்களை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவு பக்கசார்பான முறையிலேயே செயற்படுகின்றது என்பதை தம்மால் நிரூபித்து காட்டமுடியும் எனவும், அது தொடர்பில் சட்டவல்லுனர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவின் ஒட்டு மொத்த செயற்பாடுகளும் சட்டவிரோதமானவை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்படும் கைது நடவடிக்கைகள் பக்கசார்பான முறையில் காணப்படுவதாகவும், அதன் கைதுகள், விசாரணைகள், நீதிமன்ற ஆஜர்படுத்தல்கள் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் அமையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவின் நடவடிக்கைகளை பிரதமர் தலைமையிலான அமைச்சரவை உப குழுவொன்றே கட்டுப்படுத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மகிந்தவின் ஆட்சி காலத்தில் கடமையாற்றிய அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை உப குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசியல் வரலாற்றில் இவ்வாறான ஓர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் இதுவரை ஒருபோதும் இடம்பெற்றதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்ட போது இவ்விடயம் குறித்து அக்கறை செலுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் முழுமை பெறாத ஓர் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டு அவரை கைது செய்யுமாறு பொலிஸார் நீதவானிடம் கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறே சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவதாகவும், இவ்வாறான அரசியல் பழிவாங்கல்களை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவு பக்கசார்பான முறையிலேயே செயற்படுகின்றது என்பதை தம்மால் நிரூபித்து காட்டமுடியும் எனவும், அது தொடர்பில் சட்டவல்லுனர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum