Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திருடர்கள் உள்ளே இருக்க வெளித்திருடர்களை பிடிக்கும் மைத்திரி அரசு: சுசில்

Go down

திருடர்கள் உள்ளே இருக்க வெளித்திருடர்களை பிடிக்கும் மைத்திரி அரசு: சுசில் Empty திருடர்கள் உள்ளே இருக்க வெளித்திருடர்களை பிடிக்கும் மைத்திரி அரசு: சுசில்

Post by oviya Wed May 06, 2015 2:31 pm

எல்லா இடங்களிலும் திருடர்களை பிடிக்கின்றார்கள் எனினும் வீட்டினுள் உள்ள திருடரை பிடிப்பதற்கு அரசாங்கத்தினால் முடியவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடியுடன் தொடர்புடைய அர்ஜுன மகேந்திரனை கைது செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளமால் இருப்பது குறித்து மிகவும் மனவருத்தமடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பசில், ஜொன்ஸ்டன் போன்ற முன்னாள் அமைச்சர்களை பிணை வழங்காமல் விளக்கமரியலில் வைத்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழக்கு அறிக்கைகளில் பொது சொத்து சட்டத்திற்கமைய தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டிய சுசில் பிரேம ஜயந்த,

அமைச்சர் ஒருவர் பொது சொத்துக்களை பொது மக்களுக்காக பயன்படுத்தியது எவ்வாறு தவறாக பயன்படுத்தியதாக கருத முடியும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஆலோசகரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு இடையிலான சந்திப்பு குறித்து ஐக்கிய தேசிய கட்சி பயத்துடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அபிவிருத்தி திட்டங்கள் இடை நிறுத்தப்பட்டதற்கு ஜனாதிபதி காரணம் அல்ல என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியதற்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அரசாங்கத்தில் பலம் வாய்ந்தவராக காணப்படுவது பிரதமர் என்பதனால் நாட்டின் அபிவிருத்தி திட்டங்கள் இடை நிறுத்தப்பட்டதற்கு பொறுப்பு கூறவேண்டியது பிரதமர் ரணில் விக்ரமசிங்க என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum