Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விரைவில் அரசியல் சாசன பேரவையை நிறுவுங்கள்: சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்து

Go down

விரைவில் அரசியல் சாசன பேரவையை நிறுவுங்கள்: சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்து Empty விரைவில் அரசியல் சாசன பேரவையை நிறுவுங்கள்: சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்து

Post by oviya Wed May 06, 2015 2:02 pm

அரசியல் சாசனப் பேரவை வெகுவிரைவில் நிறுவப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டத்தரணிகள் சங்கம் இதனை நேற்றைய தினம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

19ம் திருத்தச் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்படுவதனை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்,

17ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படாமல் இருந்தததை போன்று 19ம் திருத்தச் சட்டமும் அமுல்படுத்தப்படாமல் இருக்கக் கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தினால் 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் எனவும், இதற்காக ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

19ம் திருத்தச் சட்டம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முழுமையான அளவில் இணங்காத போதிலும், ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை நிலைநாட்ட முக்கிய நகர்வாக 19ம் திருத்தச் சட்டத்தை கருத முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல் சாசனப் பேரவையின் பெரும்பான்மையானவர்கள் அரசியல் சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை போன்றே அதனை அமுல்படுத்தவும் அனைத்து தரப்பினரும் அக்கறை காட்ட வேண்டும் என அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum