Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இராணுவ சிப்பாயை மெய்ப்பாதுகாவலராக வைத்துக் கொள்ள நாமலுக்கு அதிகாரமில்லை: ருவன் குணசேகர

Go down

இராணுவ சிப்பாயை மெய்ப்பாதுகாவலராக வைத்துக் கொள்ள நாமலுக்கு அதிகாரமில்லை: ருவன் குணசேகர Empty இராணுவ சிப்பாயை மெய்ப்பாதுகாவலராக வைத்துக் கொள்ள நாமலுக்கு அதிகாரமில்லை: ருவன் குணசேகர

Post by oviya Tue May 05, 2015 2:35 pm

இராணுவ சிப்பாய் ஒருவரை தனது மெய்ப்பாதுகாவலராக வைத்துக் கொள்வதற்கு நாமல் ராஜபக்சவிற்கு எவ்வித அதிகாரமும் இல்லையென பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட நிகழ்வில் இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கி ஒன்றுடன் ஜனாதிபதி அருகில் சென்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்குனுகொலபெலெஸ்ஸ பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டத்திற்கு குறித்த இராணுவ சிப்பாய், நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பாளராகவே சென்றுள்ளார் என தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு இராணுவ சேவையில் ஈடுபடும் ஒருவரை தனிப்பட்ட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கடந்த வாரத்தில் நாமல் ராஜபக்ச குறித்த இராணுவ சிப்பாயிடம் தண்ணீர் போத்தலே இருந்ததாக பத்திரிகைகளில் தெரிவித்திருந்திருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

இராணுவ சிப்பாயின் கையில் துப்பாக்கி இருந்தமையை உறுதி செய்த பொலிஸ் ஊடக பேச்சாளர், அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் என விசாரணைகளின் போது தெரியவந்ததாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட குறித்த இராணுவ சிப்பாய் தற்பொழுது விளக்கிமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum