Top posting users this month
No user |
விவசாயிகள் தற்கொலை வெறும் நாடகம் தான்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்
Page 1 of 1
விவசாயிகள் தற்கொலை வெறும் நாடகம் தான்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது என்பது வெறும் நாடகமே என கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமைச்சர் ஓம் பிரகாஷ் தாங்கர்.
ஹரியானா மாநிலத்தில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் ஓம் பிரகாஷ் தாங்கர்.
இவரிடம் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு மாநில அரசு நஷ்ட ஈடு வழங்குமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், இந்திய அரசு சட்டத்தின்படி தற்கொலை செய்து கொள்வது குற்றச் செயலாகும்.
எவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவறுவாரோ அது கோழைத்தனம்.
எனவே இந்த கோழைகளின் பின்னால் அரசு நிற்காது, இதுமாதிரியான குற்றவாளிகளுடன் அரசு இருக்கவும் முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர், விவசாயிகளின் மீது பா.ஜ.க அரசு கொண்டிருக்கும் அலட்சிய போக்கை காட்டுவதாக உள்ளது என பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் தான் கூறிய கருத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று கூறியுள்ள ஓம் பிரகாஷ், தற்கொலை என்பது ஒரு நாடகமே, என்னால் முடிந்தவரை விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பயிர்கள் சேதத்திற்காக தற்கொலை செய்து கொள்வது தீர்வாகது என்றும், பூஜ்ய நிலையில் இருப்பவர்கள் மீண்டும் விவசாயத்தை தொடங்க பல்வேறு வசதிகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் ஓம் பிரகாஷ் தாங்கர்.
இவரிடம் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு மாநில அரசு நஷ்ட ஈடு வழங்குமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், இந்திய அரசு சட்டத்தின்படி தற்கொலை செய்து கொள்வது குற்றச் செயலாகும்.
எவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவறுவாரோ அது கோழைத்தனம்.
எனவே இந்த கோழைகளின் பின்னால் அரசு நிற்காது, இதுமாதிரியான குற்றவாளிகளுடன் அரசு இருக்கவும் முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர், விவசாயிகளின் மீது பா.ஜ.க அரசு கொண்டிருக்கும் அலட்சிய போக்கை காட்டுவதாக உள்ளது என பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் தான் கூறிய கருத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று கூறியுள்ள ஓம் பிரகாஷ், தற்கொலை என்பது ஒரு நாடகமே, என்னால் முடிந்தவரை விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பயிர்கள் சேதத்திற்காக தற்கொலை செய்து கொள்வது தீர்வாகது என்றும், பூஜ்ய நிலையில் இருப்பவர்கள் மீண்டும் விவசாயத்தை தொடங்க பல்வேறு வசதிகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum