Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அவன்கார்ட் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதி நீதியமைச்சர்

Go down

அவன்கார்ட் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதி நீதியமைச்சர் Empty அவன்கார்ட் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதி நீதியமைச்சர்

Post by oviya Wed Apr 29, 2015 12:19 pm

குற்றப் புலனாய்வு திணைக்களம் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் கையளித்துள்ள அவன்கார்ட் நிறுவனம் சம்பந்தமான அறிக்கையில் அதனுடன் தொடர்புடைய 5 பேரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
அவன்கார்ட் நிறுவனம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் நடத்திய விசாரணைகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அறிக்கையை துரிதமாக ஆராய்நது சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.

அவன்கார்ட் நிறுவனம் தொடர்பில் விசாரணை நடத்திய குற்றப் புலனாய்வு திணைக்களம் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி, பணிப்பாளர் மஞ்சுள குமார, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச , பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டி.எம்.எஸ்.ஜயரத்ன, ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம், துப்பாக்கி மற்றும் வெடிக்கும் பொருட்களை தம்வசம் வைத்திருப்பதற்கு எதிரான சட்டம் ஆகியவற்றின் கீழ் இவர்களை கைது செய்ய வேண்டும்.

எவ்வாறாயினும் கைது செய்யப்படுவது ஏன் தாமதிக்கப்பட்டு வருகிறது என ஆராய்ந்து அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum