Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சுதந்திர கட்சியிலிருந்து மகிந்த, பசில், கோத்தா, நாமல் விரட்டியடிப்பு: சமலிற்கு பதிலாக சஷிந்திர

Go down

சுதந்திர கட்சியிலிருந்து மகிந்த, பசில், கோத்தா, நாமல் விரட்டியடிப்பு: சமலிற்கு பதிலாக சஷிந்திர Empty சுதந்திர கட்சியிலிருந்து மகிந்த, பசில், கோத்தா, நாமல் விரட்டியடிப்பு: சமலிற்கு பதிலாக சஷிந்திர

Post by oviya Sat Apr 25, 2015 11:49 am

மோசடியில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு எதிர்வரும் பொது தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அனுமதி வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மகன் நாமல் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ஆகியோருக்கே இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது.

இதேவேளை சபாநாயகர் சமல் ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதனால், அவருக்கு பதிலாக அவரது மகன் சஷீந்திர ராஜபக்சவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் களமிறங்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதோடு, அதாவது நிரூபமா ராஜபக்சவுக்கு மாத்திரமே கிடைத்துள்ளது.

அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்காமலும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைவதற்கு முன்னர் எதிர்கட்சிக்கு செல்லவிருந்ததாகவும் அறியமுடிந்தது.

எப்படியிருப்பினும் மீண்டும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசியல் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பு வழங்குவதனை தடுக்க வேண்டுமென ஹம்பாந்தோட்டை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியையும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum