Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


முதல் பிறை சிறப்பு…

Go down

முதல் பிறை சிறப்பு…         Empty முதல் பிறை சிறப்பு…

Post by oviya Thu Apr 23, 2015 2:49 pm

ரமலானின் முதல் பிறையை கணக்கிடுவதற்கு, அதற்கு முந்தைய மாதமாகிய ஷஃபான் மாதத்தின் ஆரம்ப, கடைசி ramzan1நாட்களை கணக்கிடுவதிலும், ரமளானை அடுத்த ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை கணக்கிடுவதிலும் ஒவ்வொரு முஸ்லிமும் அக்கறை காட்டுவது அவசியமாகும்.

1. ஷஃபான் மாதத்தின் நாட்களை கணக்கிடும் முறை

ரமலானுக்காக ஷஃபான் பிறையைக் கணக்கிட்டு வாருங்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (திர்மிதி 682)

‘பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்! பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி 1909, திர்மிதி 624)

‘ரமலானுக்கு முன் நோன்பு நோற்காதீர்கள்ஸ’ நபிமொழி. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள்: அஹ்மத் நஸயீ, திர்மிதி 624)

ஷஃபான் மாதம் சந்திர ஆண்டின் 8 வது மாதமாகும். இது ரமளானுக்கு முந்திய மாதம்.

ரமலான் மாதம் சந்திர ஆண்டின் 9 வது மாதமாகும். நோன்பு வைப்பதற்காக இறைவன் தேர்வு செய்த மாதம்.

ஷவ்வால் மாதம் சந்திர ஆண்டின் 10 வது மாதமாகும். இது ரமளானுக்கு அடுத்த மாதம்.ரமலான் மாதத்தின் முதல் பிறையை முடிவு செய்வதற்கு, ஷஃபான் மாதத்தின் பிறையை கணக்கிட்டு வர வேண்டும். அதாவது அம்மாதத்தின் முதல் பிறையையும் கடைசி பிறையையும் பார்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை முதல் ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.

ரமலான் மாதத்தின் முதல் பிறையைப் பார்த்து நோன்பு வைக்க வேண்டும். ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையைப் பார்த்து நோன்பை விட வேண்டும்.

ரமலான் மாதத்தின் முதல் பிறை மேக மூட்டத்தின் காரணமாக தென்பட வில்லையானால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்த வேண்டும். அடுத்த நாள் ரமளானின் முதல் நோன்பை வைக்க வேண்டும் என்பதை இரண்டாம் ஹதீஸிலிருந்தும், ஷஃபானின் இறுதி நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது என்பதை மூன்றாவது ஹதீஸிருந்தும் விளங்க முடிகிறது. (ஒருவரின் வழமையான நோன்பு அந்நாட்களில் அமைந்து அவர் நோன்பு நோற்றால் தவறில்லை என்பதை மற்றொரு நபிமொழி கூறுகிறது)

‘ரமலானுக்கு முதல் நாளும், அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது. அந்நாட்களில் வழக்கமாக நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால் அந்நாட்களில் நோன்பு நோற்கலாம்!’ (அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள்: புகாரி 1914, திர்மிதி 621)

2. ரமலான் மாதத்தின் நாட்களை கணக்கிடும் முறை

‘ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்’ என்பது நபிமொழி. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1907)

ரமலான் மாதத்தின் முதல் பிறை மேகமூட்டத்தால் தென்படவில்லையானால் எவ்வாறு ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமோ அதே போன்று ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை அதே காரணத்திற்காக தென்படவில்லையானால் ரமலான் மாதத்தையும் முப்பது நாட்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஆனாலும் மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும் என்பதையும் கவனத்தில் கொண்டு பிறையை பார்க்க முயற்சிக்க வேண்டும். மற்றொரு ஹதீஸில் 30 நாட்கள் என்றும் வந்துள்ளது.

‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நான் 29 நாட்கள் நோன்பு நோற்றது, முப்பது நாட்கள் நோற்றதை விட அதிகமாகும்’ என்று இப்னு மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூற்கள்: அபூதாவூது 2315, திர்மிதி 625)

நோன்பு என்றால் முப்பது நாட்கள் தான் என்றும் அவ்வாறு முப்பது நாட்கள் அமைய வில்லையென்றால் மனவருத்தம் கொள்வதும் திருப்தி அடையாதிருப்பதும், சிலவேளை ரமலான் மாதத்தின் முதல் பிறையை பார்த்த தகவல்களை அறிந்து மக்களுக்குச் சொல்லும் ஆலிம் அல்லது டவுன்ஹாஜியை திட்டுவதும் அறியாமையால் நடைமுறையில் இருந்து வரும் நிகழ்வுகளாகும். ஆனால் நபித்தோழர் இப்னு மஸ்வூது அவர்களின் கூற்று அப்படிப்பட்டவர்களுக்கு நல்ல அறிவுரையாக அமைந்துள்ளது.

30 நாட்கள் நோன்பு வைக்க வேண்டும் என்பதற்காக ரமளானுக்கு முந்திய மாதமான ஷஃபான் மாதத்தின் இறுதியில் நோன்பு வைப்பதற்கு தடை உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிறையைப் பார்ப்பதும் அதன்படி நோன்பு வைப்பதும் முஸ்லிம்கள் ஒவ்வொருவர் மீதும் பொருப்பும் கடமையுமாகும் என்பதை உணர்ந்து செயல்படுவோமாக.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum