Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஆயுத களஞ்சியத்தை அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

Go down

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஆயுத களஞ்சியத்தை அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு Empty ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஆயுத களஞ்சியத்தை அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

Post by oviya Thu Apr 23, 2015 12:43 pm

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வந்த ஆயுத களஞ்சியத்தை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப சூழலில் இருந்து அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிய போது ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப சூழலில் ஆயுத களஞ்சியம் ஒன்றை வைத்திருக்க அனுமதி வழங்கியிருந்தார்.

இந்த ஆயுத களஞ்சியம் நாட்டின் பாதுகாப்புக்கு பாரதூரமான அச்சுறுத்தலாக மாறலாம் என்பதால், அந்த களஞ்சியத்தை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த ஆயுத களஞ்சியத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தானியங்கி துப்பாக்கிகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததுடன் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இந்த ஆயுத களஞ்சியம் தொடர்பான தகவல் நாட்டில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் பாரதூரமான நிதி மோசடிகள் குறித்து தற்போது விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் அடுத்த சில நாட்களின் ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கைது செய்யப்படவிருப்பதாக பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பணிப்பாளர் சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கடமையாற்றி வருகிறார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum