Top posting users this month
No user |
குழந்தை பாக்கியம் கிட்டும் ஒடுக்கு பூஜை
Page 1 of 1
குழந்தை பாக்கியம் கிட்டும் ஒடுக்கு பூஜை
பங்குனி மாத பரணி நட்சத்திரத்தில்தான் பகவதி அம்மன் அவதரித்ததாக கூறப்படுகிறது. எனவே அன்றைய தினம் மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு அளப்பரிய பூஜை ஒன்று நடத்தி, குத்தியோட்டம், பூமாலை, துலாபாரம், பிடிப்பணம் போன்றவை நடத்தப்படுகிறது.
மாசித் திருவிழாவே இந்த கோவிலில் நடைபெறும் பெரிய திருவிழா ஆகும். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தமிழகம், கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிவார்கள்.
மாசித் திருவிழாவின் 10–ம் நாள் விழாவின்போது, நள்ளிரவு 12 மணிக்கு 9 மண்பானை, 4 சட்டி, ஒரு பனை ஓலைபெட்டி ஆகியவற்றில் 11 வகை பதார்த்தங்களையும், 2 குடம் தேனையும் கொண்டு படையலிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ ‘ஒடுக்கு பூஜை’ நடைபெறும். இந்த பூஜையில் நடைபெறும் ஊர்வலத்தின் போது அந்த பகுதியே நிசப்தமாக இருக்கும்.
பறையொலி மட்டுமே கேட்கும். கூட்டத்தில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் ஒரு குழந்தையின் அழுகை சப்தம் கூட கேட்காது என்பது வியப்பளிக்கும் விஷயமாகும்.இந்த பூஜையில் கலந்து கொண்டால் குழந்தை பாக்கியம் விரைவில் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மாசித் திருவிழாவே இந்த கோவிலில் நடைபெறும் பெரிய திருவிழா ஆகும். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தமிழகம், கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிவார்கள்.
மாசித் திருவிழாவின் 10–ம் நாள் விழாவின்போது, நள்ளிரவு 12 மணிக்கு 9 மண்பானை, 4 சட்டி, ஒரு பனை ஓலைபெட்டி ஆகியவற்றில் 11 வகை பதார்த்தங்களையும், 2 குடம் தேனையும் கொண்டு படையலிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ ‘ஒடுக்கு பூஜை’ நடைபெறும். இந்த பூஜையில் நடைபெறும் ஊர்வலத்தின் போது அந்த பகுதியே நிசப்தமாக இருக்கும்.
பறையொலி மட்டுமே கேட்கும். கூட்டத்தில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் ஒரு குழந்தையின் அழுகை சப்தம் கூட கேட்காது என்பது வியப்பளிக்கும் விஷயமாகும்.இந்த பூஜையில் கலந்து கொண்டால் குழந்தை பாக்கியம் விரைவில் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum