Top posting users this month
No user |
தொகுதிவாரி தேர்தல் முறையை எதிர்க்குமாறு உலமா கட்சி கோரிக்கை
Page 1 of 1
தொகுதிவாரி தேர்தல் முறையை எதிர்க்குமாறு உலமா கட்சி கோரிக்கை
தொகுதிவாரி தேர்தல் முறை 2007ல் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது அதனை எதிர்க்காமல் மௌனமாக இருந்த சிறுபான்மை கட்சிகள், இப்போது திடீரென தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது போல் தடுமாறுவதை காண முடிகிறது என உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
தொகுதிவாரி தேர்தல் சம்பந்தமாக அவர் மேலும் கூறியதாவது,
பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவால் 2007ம் ஆண்டு தொகுதிவாரி தேர்தல் முறை மாற்றப்படுவது குறித்த ஆலோசனைகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
அப்போது பாராளுமன்றத்தில் இருந்த சிறுபான்மைக் கட்சிகள் இதன் பாரதூரம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
ஆளுங்கட்சியுடன் இணைந்திருந்த தமிழ், முஸ்லிம் கட்சிகளும் எதிரணியில் இருந்த தமிழ் கட்சிகளும் இது பற்றிய தமது எதிர்ப்பை வெளியிடவில்லை.
இந்த நிலையில் உலமா கட்சி இது பற்றிய எதிர்ப்பை வெளியிட்டதுடன், தொகுதி வாரி தேர்தல் முறையாயின் 50க்கு 50 என்ற வகையில் விகிதாசார தேர்தல் முறையும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தது.
ஏனைய சிறுபான்மை கட்சிகள் இதுபற்றி மக்களை தெளிவூட்டவுமில்லை, இதற்கான தமது ஜனநாயக எதிர்ப்பை வெளியிடவுமில்லை. தற்போது வெள்ளம் தலைக்கு மேல் வந்த பின் இது பற்றி கலந்தாலோசிப்பது காலம் கடந்த செயலாகவே தெரிகிறது.
அரசாங்கம் தேர்தல் முறையை மாற்றுவதற்கான யோசனைகளை தயாரித்து அதனை பாராளுமன்றத்தில் இன்றோ, நாளையோ நிறைவேற்றப் போகிறோம் என அடம்பிடிக்கும் போது தான் சிறுபான்மை கட்சிகளுக்கு இதன் பாரதூரம் விளங்கியுள்ளமை பரிதாபத்துக்குரியதாகும்.
இதன் காரணமாக இத்தகைய கட்சிகள் சமூக சிந்தனையில்லாது செயற்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
ஆகவே ஐம்பதுக்கு ஐம்பது என்ற வகையில் இல்லாது முன் வைக்கப்படும் தொகுதிவாரி தேர்தல் முறையை எதிர்க்கும்படி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சிறு கட்சிகளை உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது என அவர் தெரிவித்துள்ளார்
தொகுதிவாரி தேர்தல் சம்பந்தமாக அவர் மேலும் கூறியதாவது,
பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவால் 2007ம் ஆண்டு தொகுதிவாரி தேர்தல் முறை மாற்றப்படுவது குறித்த ஆலோசனைகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
அப்போது பாராளுமன்றத்தில் இருந்த சிறுபான்மைக் கட்சிகள் இதன் பாரதூரம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
ஆளுங்கட்சியுடன் இணைந்திருந்த தமிழ், முஸ்லிம் கட்சிகளும் எதிரணியில் இருந்த தமிழ் கட்சிகளும் இது பற்றிய தமது எதிர்ப்பை வெளியிடவில்லை.
இந்த நிலையில் உலமா கட்சி இது பற்றிய எதிர்ப்பை வெளியிட்டதுடன், தொகுதி வாரி தேர்தல் முறையாயின் 50க்கு 50 என்ற வகையில் விகிதாசார தேர்தல் முறையும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தது.
ஏனைய சிறுபான்மை கட்சிகள் இதுபற்றி மக்களை தெளிவூட்டவுமில்லை, இதற்கான தமது ஜனநாயக எதிர்ப்பை வெளியிடவுமில்லை. தற்போது வெள்ளம் தலைக்கு மேல் வந்த பின் இது பற்றி கலந்தாலோசிப்பது காலம் கடந்த செயலாகவே தெரிகிறது.
அரசாங்கம் தேர்தல் முறையை மாற்றுவதற்கான யோசனைகளை தயாரித்து அதனை பாராளுமன்றத்தில் இன்றோ, நாளையோ நிறைவேற்றப் போகிறோம் என அடம்பிடிக்கும் போது தான் சிறுபான்மை கட்சிகளுக்கு இதன் பாரதூரம் விளங்கியுள்ளமை பரிதாபத்துக்குரியதாகும்.
இதன் காரணமாக இத்தகைய கட்சிகள் சமூக சிந்தனையில்லாது செயற்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
ஆகவே ஐம்பதுக்கு ஐம்பது என்ற வகையில் இல்லாது முன் வைக்கப்படும் தொகுதிவாரி தேர்தல் முறையை எதிர்க்கும்படி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சிறு கட்சிகளை உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது என அவர் தெரிவித்துள்ளார்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum