Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இயற்கை எழிலுடன் கூடிய சேலம் கந்தாஸ்ரமம் கோவில்

Go down

இயற்கை எழிலுடன் கூடிய சேலம் கந்தாஸ்ரமம் கோவில் Empty இயற்கை எழிலுடன் கூடிய சேலம் கந்தாஸ்ரமம் கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:37 pm

சேலம் நகரின் அருகில் உடையபட்டி என்ற இடத்திற்கு அருகில் இயற்கை எழில் சூழ்ந்து முற்றிலும் மலைகளுடன் காட்சியளிக்கிறது இந்த ஆசிரமக்கோவில். கார்த்திகை தீபம், விசாகம் போன்றவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இக்கோவிலுக்கு வருபவர்கள் சுற்றிலும் உள்ள இயற்கை சூழ்நிலைகளாலும், இக்கோவிலின் அமைப்பாலும் மிகவும் கவரப்படுகின்றனர். 16 அடி உயரத்தில் தத்திராத்ரேய பகவான் இங்கு உள்ளார். சொர்ண ஆகர்ஷண பைரவர் இத்தலத்தில் உள்ளார். இத்தலத்தில் உள்ள சங்கடஹர பைரவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு வேதங்களுக்குரிய உருவங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முருகனின் சன்னதியும் முருகனின் தாயான பார்வதியின் சன்னதியும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஜோதிட சாஸ்திரப்படி முருகனை சுற்றி மனைவியுடன் கூடிய நவகிரகங்கள் இங்கு உள்ளது, மிகவும் சிறப்பான விஷயமாகும். வேத விநாயகர், ஆதி சங்கரர் உட்பட பல விக்ரகங்கள் அழகுற மொத்தமாக ஒரே இடத்தில் அமைந்துள்ளது இங்கு மட்டுமே.

ஸ்தல வரலாறு:

இந்த ஆசிரமத்தை நிறுவியவர் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் என்பவர், ஒரு முறை இவர் கனவில் வந்த முருக கடவுள் தனக்கு ஒரு கோவில் அமைக்கவேண்டி கூறினார். அதற்கான இடமாக இந்த கோவில் தற்போது இருக்கும் இடத்தை கூறிவிட்டு மறைந்துவிட்டார். முருகன் சொன்ன இடத்தை தேடி அலைந்த சுவாமிகள் பல இடங்கள் தேடி அலைந்து கனவில் முருகன் சொன்ன இடம் இதுதான் என உணர்ந்து கொண்டார்.

முருகன் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து சுவாமிகள் கோவில் கட்டினார். காலமாற்றத்தில் இக்கோவில் மிகப்பெரிய கோவிலாக மிகப்பெரும் கண்கவர் சிற்பங்கள் கொண்ட கோவிலாக உருவெடுத்துள்ளது.

சிறப்பு:

இத்தலத்தில் வழிபட்டால் கல்யாணபாக்கியம், குழந்தை பாக்கியம் கை கூடுகிறது. இத்தலத்தில் வழிபட்டால், குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோரிக்கை நிறைவேறிய பிறகு வஸ்திரங்கள் சாற்றி வழிபடுவது இந்த பகுதி மக்களின் நம்பிக்கை. நகர வாழ்க்கையில் இருந்து விலகி கொஞ்சம் மன அமைதியை விரும்புவோர் இக்கோவிலுக்கு சென்றால் இயற்கை எழில் சூழ்ந்த இக்கோவில் உங்களை கவர்வது உறுதி.

செல்லும் வழி:

சென்னை அல்லது மற்ற ஊர்களில் இருந்து செல்பவர்கள் சேலம் சென்று அங்கிருக்கும் நகர பேருந்து நிலையத்தில் இருந்து உடையபட்டி செல்லும் பேருந்தில் ஏறி உடையபட்டியில் இருந்து இக்கோவிலுக்கு 2 கிமீ தூரம் ஆட்டோவில் செல்ல வேண்டும்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum