Top posting users this month
No user |
வலி. வடக்கில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை
Page 1 of 1
வலி. வடக்கில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை
வலி. வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையமாக இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று யாழ்.அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.
அண்மையில் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட 7 கிராம சேவகர் பிரிவுகளில் குடியேறிய மக்களுடைய சொத்துக்கள் அதிகளவில் கொள்ளையிடப்படும் சம்பவங்கள் தொடர்பாக கேட்டபோதே அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக அங்கு குடியேறிய மக்களால் தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி விடயம் தொடர்பாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ஏ.ஜெயசிங்கவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதன்படி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் 20இற்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டிருந்தனர்.
பொலிஸாருடைய நடவடிக்கையால் தற்போது கொள்ளைச் சம்பவங்கள் குறைவடைந்துள்ளன.
மேலும் அங்கு குடியேறும் மக்களுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளும் முகமாக பொலிஸாருடைய விசேட ரோந்து மற்றும் சோதனைச் சாவடிகளை அமைத்து தருவதாகவும் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்திருந்தார்.
பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டிய பகுதிகளை தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தெரிவு செய்து கொடுத்ததும் உடனடியாக பொலிஸ் சோதனைச்சாவடி அப்பகுதியில் அமைக்கப்படும் என்றும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்திருந்தார்.
அண்மையில் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட 7 கிராம சேவகர் பிரிவுகளில் குடியேறிய மக்களுடைய சொத்துக்கள் அதிகளவில் கொள்ளையிடப்படும் சம்பவங்கள் தொடர்பாக கேட்டபோதே அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக அங்கு குடியேறிய மக்களால் தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி விடயம் தொடர்பாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ஏ.ஜெயசிங்கவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதன்படி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் 20இற்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டிருந்தனர்.
பொலிஸாருடைய நடவடிக்கையால் தற்போது கொள்ளைச் சம்பவங்கள் குறைவடைந்துள்ளன.
மேலும் அங்கு குடியேறும் மக்களுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளும் முகமாக பொலிஸாருடைய விசேட ரோந்து மற்றும் சோதனைச் சாவடிகளை அமைத்து தருவதாகவும் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்திருந்தார்.
பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டிய பகுதிகளை தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தெரிவு செய்து கொடுத்ததும் உடனடியாக பொலிஸ் சோதனைச்சாவடி அப்பகுதியில் அமைக்கப்படும் என்றும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்திருந்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum