Top posting users this month
No user |
Similar topics
மழலை பாக்கியம் அருளும் ஆலையம்மன் வழிபாடு
Page 1 of 1
மழலை பாக்கியம் அருளும் ஆலையம்மன் வழிபாடு
தனிப் பெருந்தெய்வமாக சக்தி வழிபாடு நடத்தடப்படும் 108 திருத்தலங்களில், கருமாரியம்மன் எழுந்தருளியிருக்கும் திருவேற்காடு, காமாட்சி கொலு வீற்றிருக்கும் காஞ்சிபுரம், மாரியம்மன் அருளாட்சி செய்யும் சமயபுரம் ஆகிய திருத்தலங்கள் புகழ் பெற்றவை. அத்தகைய திருத்தலங்களுக்கு இணையாக, எங்கும் புகழ் பரப்பி, வளர்ந்து வரும் திருத்தலமாக தேனாம்பேட்டை ஆலையம்மன் கோவில் விளங்குகிறது.
தல வரலாறு:
அலைமேல் அமர்ந்தாள் அம்மன் சுயம்புவாக தோன்றியவள். ஆனால், இந்த அம்மன் முதன்முதலில் தோன்றிய இடம் நமக்குத் தெரியவில்லை.
இந்த ஆலயத்தில் பணியாற்றி வரும் அர்ச்சகர்களும், பிற பெரியவர்களும் செவிவழி செய்தியாக சொல்வதை வைத்து பார்த்தால், இந்த அம்மன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, தேனாம்பேட்டையில், நிலை கொண்டிருக்க வேண்டும் என தெரிய வருகிறது. இந்த அம்மனை தரிசித்தால், மழலை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
நடை திறந்து இருக்கும் நேரம்:
தேனாம்பேட்டை அருகே பனகல் பூங்காவில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் தியாகராய சாலை அண்ணாசாலையோடு சந்திக்கும் இடத்தில் வலது பக்கத்தில் அலைமேல் அமர்ந்தாள் ஆலயம் அழகுற காட்சி அளிக்கிறது. இந்த ஆலயத்தின் நடை காலை 6 மணிமுதல் 11.30 மணிவரையிலும், மாலை 5.30 முதல் இரவு 9 வரையிலும் திறந்து இருக்கும். இங்கு ஒரு கால பூஜை தினமும் நடைபெறுகிறது.
முக்கிய திருவிழாக்கள்:
ஆடி மாதத்தில் 4 வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் வைப்பது, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மன் அலங்காரம் மற்றும் சிம்ம வாகனத்தில் வீதியுலா புறப்பாடு, பூத வாகனத்தில் வீதியுலா புறப்பாடு சிறப்பாக நடைபெறும். நவராத்திரி விழாவையொட்டி, 10 நாள்கள் அம்மன் அலங்காரம், இன்னிசை கச்சேரி, வீதியுலா புறப்பாடு ஆகியன நிகழும். மாட்டுப்பொங்கல் அன்று அம்பாள் பட்டறையில் விமானம் புறப்பாடு, வீதியுலா நடைபெறும்.
எப்படி செல்வது?
ஆலையம்மன் கோயில் பஸ் ஸ்டாப்பில் இறங்கி நடந்து செல்லும் தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
தல வரலாறு:
அலைமேல் அமர்ந்தாள் அம்மன் சுயம்புவாக தோன்றியவள். ஆனால், இந்த அம்மன் முதன்முதலில் தோன்றிய இடம் நமக்குத் தெரியவில்லை.
இந்த ஆலயத்தில் பணியாற்றி வரும் அர்ச்சகர்களும், பிற பெரியவர்களும் செவிவழி செய்தியாக சொல்வதை வைத்து பார்த்தால், இந்த அம்மன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, தேனாம்பேட்டையில், நிலை கொண்டிருக்க வேண்டும் என தெரிய வருகிறது. இந்த அம்மனை தரிசித்தால், மழலை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
நடை திறந்து இருக்கும் நேரம்:
தேனாம்பேட்டை அருகே பனகல் பூங்காவில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் தியாகராய சாலை அண்ணாசாலையோடு சந்திக்கும் இடத்தில் வலது பக்கத்தில் அலைமேல் அமர்ந்தாள் ஆலயம் அழகுற காட்சி அளிக்கிறது. இந்த ஆலயத்தின் நடை காலை 6 மணிமுதல் 11.30 மணிவரையிலும், மாலை 5.30 முதல் இரவு 9 வரையிலும் திறந்து இருக்கும். இங்கு ஒரு கால பூஜை தினமும் நடைபெறுகிறது.
முக்கிய திருவிழாக்கள்:
ஆடி மாதத்தில் 4 வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் வைப்பது, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மன் அலங்காரம் மற்றும் சிம்ம வாகனத்தில் வீதியுலா புறப்பாடு, பூத வாகனத்தில் வீதியுலா புறப்பாடு சிறப்பாக நடைபெறும். நவராத்திரி விழாவையொட்டி, 10 நாள்கள் அம்மன் அலங்காரம், இன்னிசை கச்சேரி, வீதியுலா புறப்பாடு ஆகியன நிகழும். மாட்டுப்பொங்கல் அன்று அம்பாள் பட்டறையில் விமானம் புறப்பாடு, வீதியுலா நடைபெறும்.
எப்படி செல்வது?
ஆலையம்மன் கோயில் பஸ் ஸ்டாப்பில் இறங்கி நடந்து செல்லும் தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திருமண பாக்கியம், குழந்தை பாக்கியத்தை கொடுத்து அருளும் தேவி கருமாரியம்மன்
» குழந்தை பாக்கியம் கிடைக்க இரட்டை கிருஷ்ணர்கள் வழிபாடு
» சுகப்பிரசவம் அருளும் கர்ப்பரக்ஷாம்பிகை மந்திரம்
» குழந்தை பாக்கியம் கிடைக்க இரட்டை கிருஷ்ணர்கள் வழிபாடு
» சுகப்பிரசவம் அருளும் கர்ப்பரக்ஷாம்பிகை மந்திரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum