Top posting users this month
No user |
Similar topics
அருள்மிகு திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில் திருக்குடமுழுக்கு விழா
Page 1 of 1
அருள்மிகு திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில் திருக்குடமுழுக்கு விழா
திருப்போரூர் விழாக்கோலம்
கந்தசுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை விமரிசையாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருப்போரூர் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் 15 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேக விழா நாளை விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக 2012 ஜூன் மாதம் பாலாலயம் நடத்தப்பட்டு திருப்பணிகள் தொடங்கி ரூ.5 கோடி மதிப்பில் நிறைவு பெற்றுள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 8ம் தேதி சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம் நடந்தது.
நேற்று காலை குடத்தில் புனிதநீர் யானை மீது வைத்து மாட வீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டு முதல்கால யாக பூஜை தொடங்கியது. இன்று காலை 9 மணிக்கு 2ம் கால பூஜை நடந்தது. மாலை 5.30 மணிக்கு 3ம் கால யாக பூஜை நடைபெறுகிறது. நாளை காலை 7.30 மணிக்கு 4ம் கால யாக பூஜையும் 9.45 மணிக்கு கலசங்கள் புறப்பாடும் நடைபெறுகிறது. 10.35 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 10.45 மணிக்கு மூலவர் விமானம் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
மாலை 4.30 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 6 மணிக்கு கந்தசுவாமி பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதியுலா நடக்கிறது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், கால்நடை துறை அமைச்சர் சின்னையா, அறநிலையத்துறை செயலாளர் கண்ணன், ஆணையர் தனபால், கலெக்டர் பாஸ்கரன், எஸ்.பி. விஜயகுமார், மரகதம் குமரவேல் எம்.பி., திருப்போரூர் எம்எல்ஏ தண்டரை மனோகரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சியில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதநல்லிணக்கத்துக்கு எடுத்துகாட்டாக விளங்கும் கோயில்
செப்பு பட்டயம் உரைக்கும் மெய்சிலிர்க்கும் தகவல்
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தென்னகத்தின் தொண்டை மண்டலத்தில் களப்பிரரின் ஆட்சிக்கு முடிவு கட்டிய பல்லவ அரசன் சிம்ம விஷ்ணு, முதலாம் மகேந்திர வர்மன், மாமல்லன் எனும் முதலாம் நரசிம்ம வர்மன், முதலாம் பரமேஸ்வர வர்மன் ஆகியோர் இக்கோவிலை பராமரித்து வந்தாலும் அதற்கான கல்வெட்டுகள் அழிந்து விட்டன. பல்லவ அரசன் ராஜசிம்மன் இக்கோயிலை புனரமைத்த தகவல் மட்டுமே உள்ளது. ராஜசிம்மனுக்கு பிறகு வந்த அரசர்களில் இரண்டாம் நந்திவர்ம பல்லவ வர்மன் வைணவனாகவும், மூன்றாம் நந்திவர்மன் சிவனடியாராகவும் ஆனதாலும், அவர்களுக்கு பின் ஆட்சி நடத்திய நிருபதுங்க வர்மன் மேற்கொண்ட அரசியல் மாற்றத்தினாலும் பல்லவ நாடு முழுவதும் சோழ மண்டலத்தின் ஒரு பா
கந்தசுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை விமரிசையாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருப்போரூர் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் 15 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேக விழா நாளை விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக 2012 ஜூன் மாதம் பாலாலயம் நடத்தப்பட்டு திருப்பணிகள் தொடங்கி ரூ.5 கோடி மதிப்பில் நிறைவு பெற்றுள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 8ம் தேதி சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம் நடந்தது.
நேற்று காலை குடத்தில் புனிதநீர் யானை மீது வைத்து மாட வீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டு முதல்கால யாக பூஜை தொடங்கியது. இன்று காலை 9 மணிக்கு 2ம் கால பூஜை நடந்தது. மாலை 5.30 மணிக்கு 3ம் கால யாக பூஜை நடைபெறுகிறது. நாளை காலை 7.30 மணிக்கு 4ம் கால யாக பூஜையும் 9.45 மணிக்கு கலசங்கள் புறப்பாடும் நடைபெறுகிறது. 10.35 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 10.45 மணிக்கு மூலவர் விமானம் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
மாலை 4.30 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 6 மணிக்கு கந்தசுவாமி பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதியுலா நடக்கிறது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், கால்நடை துறை அமைச்சர் சின்னையா, அறநிலையத்துறை செயலாளர் கண்ணன், ஆணையர் தனபால், கலெக்டர் பாஸ்கரன், எஸ்.பி. விஜயகுமார், மரகதம் குமரவேல் எம்.பி., திருப்போரூர் எம்எல்ஏ தண்டரை மனோகரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சியில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதநல்லிணக்கத்துக்கு எடுத்துகாட்டாக விளங்கும் கோயில்
செப்பு பட்டயம் உரைக்கும் மெய்சிலிர்க்கும் தகவல்
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தென்னகத்தின் தொண்டை மண்டலத்தில் களப்பிரரின் ஆட்சிக்கு முடிவு கட்டிய பல்லவ அரசன் சிம்ம விஷ்ணு, முதலாம் மகேந்திர வர்மன், மாமல்லன் எனும் முதலாம் நரசிம்ம வர்மன், முதலாம் பரமேஸ்வர வர்மன் ஆகியோர் இக்கோவிலை பராமரித்து வந்தாலும் அதற்கான கல்வெட்டுகள் அழிந்து விட்டன. பல்லவ அரசன் ராஜசிம்மன் இக்கோயிலை புனரமைத்த தகவல் மட்டுமே உள்ளது. ராஜசிம்மனுக்கு பிறகு வந்த அரசர்களில் இரண்டாம் நந்திவர்ம பல்லவ வர்மன் வைணவனாகவும், மூன்றாம் நந்திவர்மன் சிவனடியாராகவும் ஆனதாலும், அவர்களுக்கு பின் ஆட்சி நடத்திய நிருபதுங்க வர்மன் மேற்கொண்ட அரசியல் மாற்றத்தினாலும் பல்லவ நாடு முழுவதும் சோழ மண்டலத்தின் ஒரு பா
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum