Top posting users this month
No user |
Similar topics
திருமண பாக்கியம், குழந்தை பாக்கியத்தை கொடுத்து அருளும் தேவி கருமாரியம்மன்
Page 1 of 1
திருமண பாக்கியம், குழந்தை பாக்கியத்தை கொடுத்து அருளும் தேவி கருமாரியம்மன்
திருமண பாக்கியம் மற்றும் குழந்தை பேறு இல்லாமல் அவதிப்படுபவர்கள் மனதுருகி தன்னைத் தேடி வந்தால், அவர்களுக்கு வேண்டியற்றை வாரி வழங்கி வருகிறாள் பெங்களூரு ராஜாஜி நகரில் குடிகொண்டிருக்கும் தேவி கருமாரியம்மன். பெங்களூரு ராஜாஜி நகர் 6 வது பிளாக்கில் தேவி கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் சிறிய அளவில் இருந்தாலும் தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு குறைவே இல்லாமல் அருளாசி வாரி வழங்கி வருகிறாள். இக்கோவிலை நிர்வகித்து வரும் ஜெயசீல சரணகுரு கருமாரியம்மன் இப்பகுதியில் அவதரித்தது குறித்து கூறுகையில், நான் 20 வயதாக இருந்த போது தர்மஸ்தலா கோவிலுக்கு சென்றேன். அப்போது பெண் உருவம் ஒன்று கனவில் வந்தது.
கனவில் வந்த பெண் உருவம், என்னிடம் பேசியது. உன் வீட்டின் அருகே 2 அரசமரத்துடன் கூடிய காலியிடத்தில் கோவில் கட்டச் சொல்லி மறைந்துவிட்டது. தொடர்ந்து தனக்கு ஏற்பட்டுள்ள மன குழப்பத்தை நிறைவேற்றக் கோரி சென்னை - திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் சென்றார். அப்போது அங்கு வீற்றிருந்த அம்மனே தனது கனவில் வந்த பெண் உருவம் என்பதை அறிந்து கொண்டேன் என்றார். கோவில் அமைக்க ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளை சமாளித்து 1991ம் ஆண்டு மே 22 ந் தேதி இரவு மகாபலிபுரத்தில் செதுக்கப்பட்ட கருமாரியம்மன் சிலையை தற்போது கோவில் அமைந்துள்ள வெறுந்தரையில் சரணரு அமைத்தார்.
தொடர்ந்து மேல்பகுதியில் தகரம் பதித்த கூடாரத்தை பதித்து பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் கருமாரியம்மனின் அருளால் அப்பகுதி மட்டுமல்லாமல் பிற பகுதி மக்களின் ஆதரவு பெருக தொடங்கியது. அம்மனின் அருள்படி கோவில் வளரத் துவங்கியது. 6 மாதத்தில் மாகடி ரோட்டில் கோவில் நுழைவுவாயில் அமைக்கப்பட்டது. 1996ம் ஆண்டு கோவில் கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அன்று முதல் மே 22ம் தேதி விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்படுகிறது. நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் முதல் வெள்ளிக்கிழமை சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது. இதில் திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், திருமணமாகாதபெண்கள் திருமணம் ஆக வேண்டியும் பூஜை செய்கின்றனர்.
மேலும் கடந்த வருடம் அனுமன், சீரடி சாய்பாபா, சரஸ்வதி ஆகிய கோவிலின் உள்பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் கோவிலின் வெளிப்புற பகுதியில் தற்போது ஏழு கன்னிமார்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாத திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் 3வது வெள்ளிக்கிழமை நடைபெறும் தீமிதி விழாவில் அநேக பக்தர்கள் கலந்து கொண்டு வருடந்தோறும் தனது குறைகள் நிறைவேற வேண்டி தீ மிதித்து வருகின்றனர். கோவிலின் முன்பாக ராஜகோபுரம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கோவில் நிர்வாகி ஜெயசீல சரணகுரு தெரிவித்துள்ளார்.
Blessed and blessed with a child without marriage sufferers find himself if he had compassion for them, Rajaji Nagar, Bangalore is there in such wise as to Karumariamman Devi.
கனவில் வந்த பெண் உருவம், என்னிடம் பேசியது. உன் வீட்டின் அருகே 2 அரசமரத்துடன் கூடிய காலியிடத்தில் கோவில் கட்டச் சொல்லி மறைந்துவிட்டது. தொடர்ந்து தனக்கு ஏற்பட்டுள்ள மன குழப்பத்தை நிறைவேற்றக் கோரி சென்னை - திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் சென்றார். அப்போது அங்கு வீற்றிருந்த அம்மனே தனது கனவில் வந்த பெண் உருவம் என்பதை அறிந்து கொண்டேன் என்றார். கோவில் அமைக்க ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளை சமாளித்து 1991ம் ஆண்டு மே 22 ந் தேதி இரவு மகாபலிபுரத்தில் செதுக்கப்பட்ட கருமாரியம்மன் சிலையை தற்போது கோவில் அமைந்துள்ள வெறுந்தரையில் சரணரு அமைத்தார்.
தொடர்ந்து மேல்பகுதியில் தகரம் பதித்த கூடாரத்தை பதித்து பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் கருமாரியம்மனின் அருளால் அப்பகுதி மட்டுமல்லாமல் பிற பகுதி மக்களின் ஆதரவு பெருக தொடங்கியது. அம்மனின் அருள்படி கோவில் வளரத் துவங்கியது. 6 மாதத்தில் மாகடி ரோட்டில் கோவில் நுழைவுவாயில் அமைக்கப்பட்டது. 1996ம் ஆண்டு கோவில் கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அன்று முதல் மே 22ம் தேதி விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்படுகிறது. நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் முதல் வெள்ளிக்கிழமை சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது. இதில் திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், திருமணமாகாதபெண்கள் திருமணம் ஆக வேண்டியும் பூஜை செய்கின்றனர்.
மேலும் கடந்த வருடம் அனுமன், சீரடி சாய்பாபா, சரஸ்வதி ஆகிய கோவிலின் உள்பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் கோவிலின் வெளிப்புற பகுதியில் தற்போது ஏழு கன்னிமார்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாத திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் 3வது வெள்ளிக்கிழமை நடைபெறும் தீமிதி விழாவில் அநேக பக்தர்கள் கலந்து கொண்டு வருடந்தோறும் தனது குறைகள் நிறைவேற வேண்டி தீ மிதித்து வருகின்றனர். கோவிலின் முன்பாக ராஜகோபுரம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கோவில் நிர்வாகி ஜெயசீல சரணகுரு தெரிவித்துள்ளார்.
Blessed and blessed with a child without marriage sufferers find himself if he had compassion for them, Rajaji Nagar, Bangalore is there in such wise as to Karumariamman Devi.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திருமண பாக்கியம், குழந்தை பாக்கியத்தை கொடுத்து அருளும் தேவி கருமாரியம்மன்
» மழலை பாக்கியம் அருளும் ஆலையம்மன் வழிபாடு
» புத்திர பாக்கியம் தரும் மாசிலாமணீஸ்வரர்
» மழலை பாக்கியம் அருளும் ஆலையம்மன் வழிபாடு
» புத்திர பாக்கியம் தரும் மாசிலாமணீஸ்வரர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum