Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எஜமானின் வீட்டுக்கு தீ வைப்பு: குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை பணிப்பெண்

Go down

எஜமானின் வீட்டுக்கு தீ வைப்பு: குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை பணிப்பெண் Empty எஜமானின் வீட்டுக்கு தீ வைப்பு: குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை பணிப்பெண்

Post by oviya Thu Apr 16, 2015 2:39 pm

பஹ்ரேனில் எஜமானின் வீட்டுக்கு தீ வைத்ததாக இலங்கை பணிப்பெண் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
48 வயதுடைய குறித்த பணிப்பெண் தனது அறையின் ஒரு பகுதியை பெற்றோல் ஊற்றி கொழுத்திவிட்டு வீட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

பஹ்ரேனின் ஜிட் அலி பகுதியில் அவர் பணிசெய்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா மூலம் இவ்விடயம் தெரியவந்துள்ளதுடன்,

தீ வைப்பதற்கு முன்னர் குறித்த கமராவை துணியொன்றினால் மூடியுள்ளார் எனவும் கடந்த ஜனவரி மாதம் 7ம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உயர் குற்றவியல் நீதிமன்றத்தில் பணிப்பெண்ணுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற ஆவணங்களின் அடிப்படையில் இலங்கை பணிப்பெண்னின் அறை 70 சதவீதம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயிருப்பினும் குறித்த பணிப்பெண் நேற்றைய தினம் தன் மீது சுமத்தப்பட்ட இக்குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவரது எஜமானின் கொடுமைகளை பொறுத்து கொள்ள முடியாததன் காரணமாகவே தான் வீட்டை விட்டு தெரியாமல் ஓடியதாகவும், தீ வைக்கவில்லை எனவும் பணிப்பெண் தெரிவித்துள்ளார்.

தான் முதலில் கண்காணிப்பு கமராவை துணியால் மூடியதாகவும், ஓடுவதற்கு முன்னர் அத்துணியை நீக்கியதாகவும் பணிப்பெண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது மகன் முதலில் தீ பரவுவதை கண்டு நித்திரையிலிருந்து எழுப்பியதாக குறித்த வீட்டு எஜமான் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமல்லாது தான் பணிப்பெண்னின் அறையில் பரவிய தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்ததாகவும் அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் குறித்த அறையிலிருந்த அலுமாரி, காற்று சீரமைப்பு அலகு, ஒரு கட்டில் மற்றும் ஏனைய பொருட்கள் சேதமாகியிருந்ததாக சிவில் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

1700 பஹ்ரேன் டினார் பெறுமதியுள்ள பொருட்கள் தீயினால் சேதமாக்கப்பட்டுள்ளன.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 14ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், பணிப்பெண்ணுக்கு பாதுகாப்பு வழக்கறிஞர் ஒருவரை நியமிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum