Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திருஷ்டி... இனி இல்லை!

Go down

திருஷ்டி... இனி இல்லை!          Empty திருஷ்டி... இனி இல்லை!

Post by oviya Sat Apr 11, 2015 3:19 pm

சீனிவாசப்பெருமாள்-பத்மாவதி திருமணம், திருப்பதி அருகிலுள்ள நாராயணவனத்தில் நடந்த போது, அதற்கு பாதுகாப்பாக வீரபத்திரர், பத்ரகாளி வந்தனர். அவர்களுக்கு அங்கு கோயில் அமைக்கப்பட்டது. திருஷ்டி மற்றும் பய உணர்வைப் போக்கும் கோயில் இது.
தல வரலாறு: நாராயணபுரத்தை ஆகாசராஜன் ஆண்டு வந்தார். பெருமாள் பக்தரான அவருக்கு புத்திரபாக்கியம் இல்லாததால் புத்திர காமேஷ்டி யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். யாகசாலை அமைக்க நிலத்தைச் சீர்படுத்தியபோது, பூமிக்கு கீழே ஏர் கலப்பையில் பட்டு ஒரு பெட்டி வெளிப்பட்டது. அப்பெட்டியிலிருந்த தாமரையின் மத்தியில், பெண் குழந்தையைக் கண்டான் மன்னன். பூமாதேவியின் அம்சமான அந்தக் குழந்தை, அலர் (தாமரை) மேல் இருந்ததால், "அலர்மேல்மங்கை' என்று பெயர் சூட்டினான் மன்னன். தாமரைக்கு "பத்மம்' என்ற பெயரும் உள்ளதால் இவள், "பத்மாவதி' எனவும் அழைக்கப்பட்டாள்.
இதனிடையே, உலக நன்மையின் பொருட்டு, விஷ்ணுவை விட்டு பிரிந்த மகாலட்சுமி பூலோகம் வந்தாள். அவளைத்தேடி சீனிவாசனாக வந்த பெருமாள், தனது பக்தையான வகுளாதேவியின் மகனாக வளர்ந்தார். ஒருசமயம், அவர் பத்மாவதியைப் பார்த்தார். திருமணம் செய்ய முடிவெடுத்தார். அவர்களது திருமணம் நாராயணவனத்தில் நடந்தது. தன் மகளின் திருமணம் சிறப்பாக நடந்தேற பாதுகாப்பு அருளும்படி, சிவனிடமும், அம்பாளிடமும் ஆகாசராஜன் வேண்டினான். சிவன் தனது அம்சமான வீரபத்திரரையும், அம்பிகை தனது அம்சமான பத்ரகாளியையும் பாதுகாப்புக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் இனிதே நடந்தேறியது. பின்பு, ஆகாசராஜன் இங்கு வீரபத்திரர் மற்றும் பத்ரகாளிக்கு கல்யாண கோலத்தில் சிலை வடித்து கோயில் எழுப்பினான். இக்கோயில் திருப்பதி- திருமலை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது.
தீர்த்த பிரசாதம்: மூலஸ்தானத்தில் 7 அடி உயரத்தில் வீரபத்திரர், பத்ரகாளியுடன் காட்சி தருகிறார். சுவாமியின் கிரீடத்தில் சந்திரனும், கங்காதேவியும் இருக்கின்றனர். கொடிமரம், நந்தி, பலிபீடம் இருக்கிறது. வீரபத்திரர் கோயில் என்றாலும், பெருமாளின் திருமணம் நடந்த தலமென்பதால், தீர்த்தமே பிரசாதமாகத் தரப்படுகிறது. வீரபத்திரருக்கு வெற்றிலைக் காப்பிட்டு, பயம் நீங்கவும், திருஷ்டி தோஷம் அகலவும் கோரிக்கை வைக்கிறார்கள்.
சிறப்பம்சம்: இங்குள்ள ஐயப்பனை "பெரியாண்டவர்' என்கின்றனர். விநாயகர், காசி விஸ்வேஸ்வரர் சந்நிதிகளும் உள்ளன. கோயிலில் இருந்து சற்று தூரத்தில், சீனிவாசர்- பத்மாவதி திருமணம் நடந்த "கல்யாண வெங்கடேசப் பெருமாள்' கோயில் உள்ளது.
தட்ச சம்ஹார விழா: ஆடியில் "தட்ச சம்ஹார' விழா நடக்கிறது. இவ்விழாவின் 5ம் நாளில் பூக்குழி இறங்கும் வைபவம் நடக்கும். அன்று வீரபத்திரர் சந்நிதி முன்பு ஒரு வாழை மரத்தைக் கட்டி, அதையே தட்சனாக கருதி வெட்டுவர். தட்ச சம்ஹாரத்திற்கு மறுநாள் வீரபத்திரரின் உக்கிரம் தணிக்க, அவரது திருவாசியில் வெற்றிலையை செருகி பூஜை செய்கின்றனர். அடுத்த நாள் திருக்கல்யாணம் நடக்கும். விழாவின், கடைசி நாளில் மூன்று வகை நைவேத்யம், பழங்கள் படைத்து பூஜை செய்வர். திருப்பதி செல்லும் போது இந்தக்
கோயிலுக்கும் சென்று வாருங்களேன்!
இருப்பிடம்: சென்னை- திருப்பதி வழியில் 95 கி.மீ., தூரத்தில் நாராயணவனம். கீழகரம் பஸ் ஸ்டாப் அருகில் கோயில்.
திறக்கும் நேரம்: காலை 8.00- 12.00, மாலை 4.00- 8.00.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum