Top posting users this month
No user |
கட்சியின் தலைமைப் பதவியை கைப்பற்றுவதில் மஹிந்த - மைத்திரி கடும் போட்டி
Page 1 of 1
கட்சியின் தலைமைப் பதவியை கைப்பற்றுவதில் மஹிந்த - மைத்திரி கடும் போட்டி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை கைப்பற்றுவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை விடவும் இந்தப் போட்டி தீவிரமாக காணப்படுகின்றது என சுதந்திரக் கட்சி உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தாண்டு காலப்பகுதி தற்போதைய ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் மிக முக்கியமான காலமாக கருதப்படுகின்றது.
19ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள 20ம் திகதிக்கு முன்னதாக போட்டியின் முடிவினை கண்டு கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் நிறைவேற்றுக்குழு ஆகியவற்றின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள இருவரும் முயற்சித்து வருகின்றனர்.
பிரதேச அரசியல்வாதிகள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரையில் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை இருவரும் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை விடவும் இந்தப் போட்டி தீவிரமாக காணப்படுகின்றது என சுதந்திரக் கட்சி உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தாண்டு காலப்பகுதி தற்போதைய ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் மிக முக்கியமான காலமாக கருதப்படுகின்றது.
19ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள 20ம் திகதிக்கு முன்னதாக போட்டியின் முடிவினை கண்டு கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் நிறைவேற்றுக்குழு ஆகியவற்றின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள இருவரும் முயற்சித்து வருகின்றனர்.
பிரதேச அரசியல்வாதிகள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரையில் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை இருவரும் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum