Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அசமந்தபோக்கு கவலையளிக்கின்றது: சீ.வி.கே.சிவஞானம்

Go down

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அசமந்தபோக்கு கவலையளிக்கின்றது: சீ.வி.கே.சிவஞானம் Empty அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அசமந்தபோக்கு கவலையளிக்கின்றது: சீ.வி.கே.சிவஞானம்

Post by oviya Fri Apr 10, 2015 12:38 pm

வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கும், அதுசார்ந்த அமைச்சுக்களுக்கும் விடுக்கப்படும் கோரிக்கைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாமலிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் துறைசார் அமைச்சுக்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அவைத்தலைவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் அவர் சுட்டிக்காட்டியிருப்பதாவது, கடந்த 07.04.2015ம் திகதி நடைபெற்ற மாகாணசபையின் 27வது அமர்வின்போது வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன், அவற்றுக்கான பதிலினை ஒரு வாரகாலத்திற்குள் குறித்த அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் வழங்குமாறு பணிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி தீர்மானம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றிய விடயங்களை உள்ளடக்கிய பதிலினை அளிப்பதற்கோ கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட கௌரவ அமைச்சர்களிடம் அதனைக்கோரிப் பெற்று கொள்ளலாம்.

இது தொடர்பாக ஒரு ஒழுங்கு முறையை பின்பற்றுமாறு அமைச்சின் செயலாளர்களையும், திணைக்களத் தலைவர்களையும் பணிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் பொதுமக்களது கடிதங்களுக்கும் பதிலளிக்க கால அட்டவணையாக 7 நாட்கள் வழங்கப்பட்டு அந்த நியமம் முழுமையாகப் பின்பற்றுவது உறுதி செய்யப்படவேண்டும், எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என அவைத்தலைவர் அவரது கடிதத்தில் கேட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum