Top posting users this month
No user |
Similar topics
அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அசமந்தபோக்கு கவலையளிக்கின்றது: சீ.வி.கே.சிவஞானம்
Page 1 of 1
அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அசமந்தபோக்கு கவலையளிக்கின்றது: சீ.வி.கே.சிவஞானம்
வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கும், அதுசார்ந்த அமைச்சுக்களுக்கும் விடுக்கப்படும் கோரிக்கைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாமலிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் துறைசார் அமைச்சுக்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அவைத்தலைவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் அவர் சுட்டிக்காட்டியிருப்பதாவது, கடந்த 07.04.2015ம் திகதி நடைபெற்ற மாகாணசபையின் 27வது அமர்வின்போது வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன், அவற்றுக்கான பதிலினை ஒரு வாரகாலத்திற்குள் குறித்த அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் வழங்குமாறு பணிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி தீர்மானம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றிய விடயங்களை உள்ளடக்கிய பதிலினை அளிப்பதற்கோ கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட கௌரவ அமைச்சர்களிடம் அதனைக்கோரிப் பெற்று கொள்ளலாம்.
இது தொடர்பாக ஒரு ஒழுங்கு முறையை பின்பற்றுமாறு அமைச்சின் செயலாளர்களையும், திணைக்களத் தலைவர்களையும் பணிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் பொதுமக்களது கடிதங்களுக்கும் பதிலளிக்க கால அட்டவணையாக 7 நாட்கள் வழங்கப்பட்டு அந்த நியமம் முழுமையாகப் பின்பற்றுவது உறுதி செய்யப்படவேண்டும், எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என அவைத்தலைவர் அவரது கடிதத்தில் கேட்டுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் துறைசார் அமைச்சுக்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அவைத்தலைவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் அவர் சுட்டிக்காட்டியிருப்பதாவது, கடந்த 07.04.2015ம் திகதி நடைபெற்ற மாகாணசபையின் 27வது அமர்வின்போது வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன், அவற்றுக்கான பதிலினை ஒரு வாரகாலத்திற்குள் குறித்த அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் வழங்குமாறு பணிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி தீர்மானம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றிய விடயங்களை உள்ளடக்கிய பதிலினை அளிப்பதற்கோ கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட கௌரவ அமைச்சர்களிடம் அதனைக்கோரிப் பெற்று கொள்ளலாம்.
இது தொடர்பாக ஒரு ஒழுங்கு முறையை பின்பற்றுமாறு அமைச்சின் செயலாளர்களையும், திணைக்களத் தலைவர்களையும் பணிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் பொதுமக்களது கடிதங்களுக்கும் பதிலளிக்க கால அட்டவணையாக 7 நாட்கள் வழங்கப்பட்டு அந்த நியமம் முழுமையாகப் பின்பற்றுவது உறுதி செய்யப்படவேண்டும், எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என அவைத்தலைவர் அவரது கடிதத்தில் கேட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கைவிடப்பட்ட ஜீப் வண்டிக்கு மூன்று அமைச்சுக்கள் பொறுப்பு கோரல்…!
» மக்களைக் குழப்பும் வகையில் அரசினால் போலிப் பிரச்சாரங்கள்! மக்களே அவதானம்: சீ.வீ.கே.சிவஞானம்
» டிரான்ஸிஸ்டர் மற்றும் ஐ.ஸி. ஏ.எம். மற்றும் எஃப்.எம். ரேடியோ மெக்கானிசம்
» மக்களைக் குழப்பும் வகையில் அரசினால் போலிப் பிரச்சாரங்கள்! மக்களே அவதானம்: சீ.வீ.கே.சிவஞானம்
» டிரான்ஸிஸ்டர் மற்றும் ஐ.ஸி. ஏ.எம். மற்றும் எஃப்.எம். ரேடியோ மெக்கானிசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum