Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திருமாவளவன் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும்: கோவைப் பெண்னால் பரபரப்பு

Go down

திருமாவளவன் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும்: கோவைப் பெண்னால் பரபரப்பு Empty திருமாவளவன் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும்: கோவைப் பெண்னால் பரபரப்பு

Post by oviya Mon Apr 06, 2015 2:36 pm

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு எதிராக கோவையில் பெண் ஒருவர் போராட்டம் நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தன்னுடன் நான்கரை வருடங்களாக நெருக்கமாக வாழ்ந்து விட்டு, என்னிடமிருந்து ரூ. 20 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் தனது ஆட்களோடு சேர்ந்து பறித்து விட்டு இப்போது என்னை ஏற்க மறுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு எதிராக அவருடைய அலுவலகம் முன்பு தொடர் போராட்டாம் நடத்தப் போகிறேன் என்று அந்தப் பெண் பெண் அரிவித்துள்ளார்.

கோவைச் சேர்ந்த 34 வய்துடைய கவிதா என்ற பெண்ணே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே இவ்வாறு தெரிவித்ததால் சர்ச்ச்சை ஏற்ப்ட்டது. இந் நிலையில் மீண்டும் இப் பெண் இவ்வாறு அறிவித்துள்ளார்.

இவர் திருமாவளவன் மீது ஏற்கனவே கோவை பொலிஸ் நிலையத்திலும் , சென்னையில் உள்ள பிலிஸ் நிலையத்திலும் புகார் கூறியுள்ளார். இந்த நிலையில் இன்று மூன்றாவது முறையாக சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் திருமாவளவன் மீது கவிதா புகார் கொடுத்தார்.

இதுகுறித்து கவிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், திருமாவளவன் கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் பழகத்தொடங்கினார். அவருடன் பழகிய பிறகு என் முதல் கணவரை பிரிந்து விட்டேன்.

தற்போது ஒரு சிறுவனை தத்து எடுத்து வளர்த்து வருகிறேன். என்னுடன் நெருங்கி பழகிய திருமாவளவன் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். உன்னைத் திருமணம் செய்தால் என்னால் அரசியல் நடத்த முடியாது என்கிறார்.

20 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்களை என்னிடம் இருந்து திருமாவளவனும் அவரது ஆட்களும் அபகரித்து விட்டனர். என்னிடம் உள்ள கோடிக்கணக்கான மற்ற சொத்துக்களையும் பறிக்க முயற்சி செய்கிறார்கள்.

என்னிடம் பணியாற்றிய லதா என்ற பெண்ணை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். நான் எங்கு சென்றாலும் அந்த பெண் என்னை பின் தொடர்ந்து வருகிறார். முழுக்க முழுக்க திருமாவளவனின் ஆட்கள் கட்டுப்பாட்டில் நான் இருந்து வருகிறேன்.

என்னிடம் பழகி ஏமாற்றியது பற்றி இதுவரை கோவை போலிசில் 10 தடவை புகார் செய்துள்ளேன். ஆனால் எனக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. எனவே அசோக் நகரில் உள்ள திருமாவளவனின் அலுவலகத்தில் இன்று முதல் போராட்டம் தொடங்க உள்ளேன். நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்றார் அவர். இதையடுத்து அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் அலுவலகம் முன்பு தொண்டர்கள் குவிந்தனர். போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum