Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அமைச்சருக்கு தண்டப்பணம் அறவீட்டு பத்திரம் வழங்கிய சுமிந்தவுக்கு எதிரான ஊழல் வழக்கு தள்ளுபடி

Go down

அமைச்சருக்கு தண்டப்பணம் அறவீட்டு பத்திரம் வழங்கிய சுமிந்தவுக்கு எதிரான ஊழல் வழக்கு தள்ளுபடி Empty அமைச்சருக்கு தண்டப்பணம் அறவீட்டு பத்திரம் வழங்கிய சுமிந்தவுக்கு எதிரான ஊழல் வழக்கு தள்ளுபடி

Post by oviya Thu Apr 02, 2015 12:25 pm

முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் சுமிந்த சமனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது.
அவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் பிரதி அமைச்சர் ஹேமால் குணசேகரவிடம் அதிவேக நெடுஞ்சாலையில் வைத்து தண்டப்பணம் அறவீட்டு பத்திரமொன்றை வழங்கியிருந்தார்.

இதனால் அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது பழிவாங்கல் நோக்கத்திற்காகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 25ம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியொன்றில் 10 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் 5 வருடங்களின் பின்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஊடாக பொலிஸ் கான்ஸ்டபிள் சுமிந்த சமன், மற்றும் பிரதி பொலிஸ் பரிசோதகர் பண்டார ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் பிரதி அமைச்சர் ஹேமால் குணசேகரவிற்கு எதிராக அதிவேக நெடுஞ்சாலையில் வைத்து தண்டபணம் அறவீட்டு பத்திரம் வழங்கப்பட்டமைக்கு பழி வாங்கும் நோக்கிலேயே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என குற்றவாளிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அநுர மெத்தகொட தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கசிப்பு எனும் போதைப்பொருளை குறைந்தளவாக நீதிமன்றில் காட்டுவதற்காகவே 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெறப்பட்டதாக தெரிவித்தே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மனுதாரர் தற்போது வெளிநாடொன்றில் தங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னரே நீதிபதி குறித்த இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளார்.

இதேவேளை அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து சுமிந்த சமன் எனப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரது வாகனத்தையும் தீக்கிரையாக்கியுள்ளனர்.

சுமிந்த சமனினாலேயே குறித்த வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது என தெரிவிக்க பொலிஸார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் பாதியிலேயே இடைநிறுத்தப்பட்டன.

அதன் பின்னர் சுமிந்த சமன் பொலிஸ் சேவையிலிருந்து நீங்கியமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum