Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Go down

வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் Empty வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Post by oviya Tue Mar 31, 2015 1:34 pm

வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் தங்களது சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை நேற்று 15 ஆவது நாட்களாக மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது தொழிலாளர்கள் சிலர் காகித ஆலையின் கூரையின் மேல் ஏறி நின்றும் ஆலையின் முகாமைத்துவ நிர்வாகப் பணிகள் முற்றாக இயங்காத படி நிர்வாகப் பிரிவுளின் கதவுகளை பூட்டியும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது வாழைச்சேனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய 5 மாத நிலுவைப் பணத்தினை வழங்குமாறு கோரியே கடந்த 15 நாட்களாக கொழும்பு வாழைச்சேனை வீதியில் அமர்ந்திருந்து போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று தொலைநகல் ஒன்று கொழும்பு காகித ஆலையின் தலைமையகத்திலிருந்து அதன் தவிசாளரினால் கையொப்பமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் இன்று பேச்சுவார்த்தை ஒன்றினை மேற்கொள்ளும் முகமாக ஆலையின் முகாமையாளர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் அனைவருக்கும் கொழும்பு தலைமையத்திற்கு வருமாறு தெரிவித்து அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

மேற்படி தகவல் அறிந்த தொழிலாளர்கள் தங்களது நிலுவைப் பணம் கிடைத்த பின்பே மேலதிக பேச்சுவார்த்தைக்கு சமூகமளிப்பதாக கூறி குறித்த தொலை நகலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதேவேளை தொழிற்சங்க பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினை சந்தித்து பேச்சுவார்தையொன்றினை மேற்கொள்ளும் முகமாக இன்று ஜக்கிய தேசிய கட்சியின் தலைமை செயலகத்திற்கு சென்றுள்ளதாக காகித ஆலையின் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum