Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஏமனில் உள்ள இந்தியர்களை மீட்க புறப்பட்ட விமானம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

Go down

ஏமனில் உள்ள இந்தியர்களை மீட்க புறப்பட்ட விமானம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை Empty ஏமனில் உள்ள இந்தியர்களை மீட்க புறப்பட்ட விமானம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

Post by oviya Mon Mar 30, 2015 12:55 pm

ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் நடக்கும் போரினை தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு விமானத்தை அனுப்பியுள்ளது.
அரபு நாடான ஏமனில் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அரசு படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.

ஏமனில் தங்கி பணிபுரியும் 3500 இந்தியர்களில் பலர் செவிலியர்கள் உள்ளிட்ட பல பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஏமன் தலைநகர் சனா உள்பட பல மாகாணங்களில் உள்ள அவர்களை பத்திரமாக மீட்டு மீண்டும் இந்தியா அழைத்து வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று தெரிவித்துள்ளார்.

இந்தியர்களை மீட்டு வருவதற்காக ஏர் இந்தியா நிறுவன விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியர்களை அழைத்து வர ஏர்பஸ் ஏ320 ரக விமானம் இன்று டெல்லியில் இருந்து ஏமன் தலைநகர் சனாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளது.

மஸ்கட் வழியாக பயணிக்கும் 180 இருக்கைகளை கொண்ட அந்த விமானம், இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இன்று மாலை டெல்லி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏமன் தலைநகரான சனாவில் இருந்து ஒரு நாளைக்கு 3 மணி நேரம் பறப்பதற்கான அனுமதியை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் முதல்கட்டமாக இந்தியா திரும்புவதற்காக 80 இந்தியர்கள் புறப்பட்டு தயார் நிலையில் உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum