Top posting users this month
No user |
சுதந்திரக் கட்சி ஐ.தே.கட்சிக்கு முட்டுக்கொடுக்கும் கட்சியாக மாறியுள்ளது: தயான் ஜயதிலக்க
Page 1 of 1
சுதந்திரக் கட்சி ஐ.தே.கட்சிக்கு முட்டுக்கொடுக்கும் கட்சியாக மாறியுள்ளது: தயான் ஜயதிலக்க
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றும் கட்சியாக மாறியுள்ளதாக அரசியல் விமர்சகரான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவரான பிலிப் குணவர்தனவின் 43 வது சிரார்த்த தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசியத்துவதை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான ஜனநாயகக் கட்சியாகும். ஏகாதிபத்திய சார்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றாக சமூக ஜனநாயக, தேசியத்துவ கட்சியாக பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்தார்.
இதனை மறந்து விட்டு, தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஏகாதிபத்திய சார்பான சம்பிரதாயத்தை கொண்ட எதிரியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு முட்டுக்கொடுக்கும் கட்சியாக மாறியுள்ளது.
இதற்காக பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை 1951 ஆம் ஆண்டு தொடங்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்கும் மேற்குலக சக்திகளின் சதித்திட்டங்கள் தற்போது செயற்பட்டு வருகிறது.
பண்டாரநாயக்கவின் கொள்கைகள் என்ற பெயரில் தற்போது அனுர பண்டாரநாயக்கவின் கொள்கைகளை சுதந்திரக் கட்சி தற்போது பின்பற்றி வருகிறது.
இது சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கையோ, எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் கொள்கையோ அல்ல எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவரான பிலிப் குணவர்தனவின் 43 வது சிரார்த்த தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசியத்துவதை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான ஜனநாயகக் கட்சியாகும். ஏகாதிபத்திய சார்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றாக சமூக ஜனநாயக, தேசியத்துவ கட்சியாக பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்தார்.
இதனை மறந்து விட்டு, தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஏகாதிபத்திய சார்பான சம்பிரதாயத்தை கொண்ட எதிரியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு முட்டுக்கொடுக்கும் கட்சியாக மாறியுள்ளது.
இதற்காக பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை 1951 ஆம் ஆண்டு தொடங்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்கும் மேற்குலக சக்திகளின் சதித்திட்டங்கள் தற்போது செயற்பட்டு வருகிறது.
பண்டாரநாயக்கவின் கொள்கைகள் என்ற பெயரில் தற்போது அனுர பண்டாரநாயக்கவின் கொள்கைகளை சுதந்திரக் கட்சி தற்போது பின்பற்றி வருகிறது.
இது சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கையோ, எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் கொள்கையோ அல்ல எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum