Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கடன் சுமை அதிகரிப்பாம்: மத்தள விமான நிலையத்தை குத்தகைக்கு விட முடிவு

Go down

கடன் சுமை அதிகரிப்பாம்: மத்தள விமான நிலையத்தை குத்தகைக்கு விட முடிவு Empty கடன் சுமை அதிகரிப்பாம்: மத்தள விமான நிலையத்தை குத்தகைக்கு விட முடிவு

Post by oviya Sun Mar 29, 2015 12:13 pm

மத்தள விமான நிலையம் குத்தகைக்கு விடப்படவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையிலுள்ள அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கே விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தினால் மாதாந்தம் 250 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக நிறுவனத்தின் தொடர்பாடல் அதிகாரி டெரிக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தை பெற்று வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன என அவர் தெரிவித்துள்ளதுடன்,

விமான பயிற்சி நிலையம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக மத்தள விமான நிலையத்தை குத்தகையில் எடுப்பதற்கு மேலும் 5 வெளிநாட்டு நிறுவனங்கள் எழுத்துமூல ஆவணங்கள் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு நிறுவனங்களை தவிர வட ஆசியாவின் முன்னணி நிறுவனமொன்று உலகம் முழுவதிலும் மின்னணு உபகரணங்கள் மற்றும் பொருட்களை விநியோகிக்கும் களஞ்சியசாலையாக மத்தள விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கு ஆர்வம் காட்டியுள்ளது.

அத்துடன் குறித்த விமான நிலையத்தை கட்டுவதற்காக பெறப்பட்ட கடன்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் செலுத்துவதற்கு கால அவகாசம் பெறப்பட்டுள்ளதாகவும் டெரிக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் கடன்தொகையை செலுத்துவதற்கு ஏற்பட்டுள்ள சிரமம் காரணத்தினாலேயே இந்த விமான நிலையத்தை குத்தகைக்கு விட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum